வீடியோ ; தன் செல்லப்பிள்ளை பதிரனா மேல் கோபித்துக் கொண்ட தோனி!

0
4301
Dhoni

நேற்று ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிக்கொண்ட மிகச் சிறப்பான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைத்தது!

முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் தைரியமாக பேட்டிங்கை தேர்வு செய்தார். பனிப்பொழிவு மனதில் வைத்து எல்லோரும் இரண்டாவது பந்து வீசுவதை விரும்பாத பொழுது, எங்களுடைய பலம் இரண்டாவது பந்து வீசுவது தான் என்று சஞ்சு சாம்சன் தைரியமான முடிவை எடுத்து வெற்றி பெற்றிருக்கிறார்.

- Advertisement -

இந்த ஆட்டத்தில் துவக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர் இளம் வீரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி ஆட்டத்தை முதல் பாதியிலேயே சென்னை அணியின் கைகளில் இருந்து எடுத்து விட்டார். முதல் 10 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 100 ரன்கள் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்திருந்தது. ஜெய்ஸ்வால் 43 பந்தில் 77 ரன்கள் குவித்தார்.

இரண்டாவது பகுதி ஆட்டத்தில் 11 வது ஓவரில் இருந்து பந்து வீச வந்த இலங்கையின் குட்டி மலிங்கா பதிரனா தாக்குதலை தொடுத்தார். அவர் ஆட்டத்தில் வீசிய 16ஆவது ஓவரில் ஹெட்மயர் இடுப்பில் தடுமாறி அடி வாங்கி, எதிரில் இருந்த துருவ் ஜூரல் ரன்னுக்கு ஓட சமாளித்து அவரும் ரன்னுக்கு ஓடுவார்.

இந்த சந்தர்ப்பத்தில் சுதாரித்த மகேந்திர சிங் தோனி உடனே பந்துக்கு ஓடி வந்து, ரன்னுக்கு ஓடிக் கொண்டிருக்கும் ஹெட்மயர் முனையில் பந்தை நோக்கி ஸ்டெம்பை குறி பார்த்து அடிப்பார். அப்பொழுது நடுவில் நின்ற பதிரனா, இதை உணராமல் பந்தை கைகளால் பிடிப்பார்.

- Advertisement -

இதனால் அதிர்ச்சி அடைந்த தோனி பதிரனா மேல் கொஞ்சம் கோபப்பட்டு கைகளை நீட்டி பேசுவார். மகேந்திர சிங் தோனி இளம் வீரர் என்பதால் பதிரனாவிடம் மிகவும் அனுசரணையாக நடந்து கொள்வார். சில வீடியோக்களில் பார்க்க அவரது செல்லப்பிள்ளை போலவே இருக்கும். ஆனால் இன்று இப்படி ஒரு காரியத்தை செய்து தோனியின் கோபத்தை அரிதாக அவரும் வாங்கிக் கொண்டார். இதற்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!