இந்தியா முதல் நியூசி அணி வரை.. சாதித்து காட்டிய ஜெயசூர்யா.. இலங்கை கிரிக்கெட் சிறப்பு முடிவு

0
186
Sanath jayasuriya

டி20 உலக கோப்பைக்குப் பிறகு இலங்கை கிரிக்கெட் அணி தற்போது நேர்மறையான எழுச்சியை கண்டு வருகிறது. இந்த எழுச்சி துவண்டு கிடந்திருந்த இலங்கை கிரிக்கெட் அணிக்கு மீண்டும் புத்துயிர் பெறும் வகையில் அமைந்துள்ளது.

அதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்த இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் ஜெயசூர்யாவை வைத்து இலங்கை கிரிக்கெட் வாரியம் சிறப்பு முடிவு ஒன்றை மேற்கொண்டுள்ளது.

- Advertisement -

ஒரு காலத்தில் இந்திய அணிக்கு நிகராக பேசப்பட்ட இலங்கை அணி முன்னணி வீரர்களின் ஓய்வால் அதன் பிறகு இலங்கை அணியால் தொடர்ந்து வெற்றிகளை குவிக்க முடியவில்லை. அவ்வப்போது சில வெற்றிகளை பெற்றாலும் அது இலங்கை அணிக்கு எந்த வகையிலும் உத்வேகம் அளிக்கும் வகையில் அமையவில்லை. மேலும் இந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையிலும் மோசமான தோல்விகளை சந்தித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது.

எனவே டி20 கேப்டனாக திகழ்ந்த வணிந்து ஹசரங்கா தனது கேப்டன் பதவியை விட்டு விலக, பயிற்சியாளரான க்றிஷ் சில்வர்வுட் தனது பயிற்சியாளர் பதவியை விட்டும் விலகினார். எனவே இதற்குப் பிறகு தனஞ்செயா டி சில்வா இலங்கை அணியின் கேப்டனாகவும், முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரான ஜெயசூர்யா இடைக்கால தலைமை பயிற்சியாளராகவும் பொறுப்பேற்றார்கள். அதற்குப் பிறகு இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் களமிறங்கிய இலங்கை அணி தோல்வியை தழுவினாலும் அதற்குப் பிறகு நடைபெற்ற ஒரு நாள் தொடரில் மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி ஒரு நம்பிக்கையை கொடுத்தது.

- Advertisement -

அதற்குப் பின்னர் இங்கிலாந்தில் சுற்று பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவினாலும் அதற்கு பிறகு நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது. இருப்பினும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் போராட்ட குணத்தை வெளிப்படுத்தியதற்காக இலங்கை வீரர்கள் பாராட்டுகளையும் பெற்றனர்.

இந்த சூழ்நிலையில் சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்கனவே வெற்றி பெற்ற இலங்கை அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. எனவே இந்த டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி வெற்றி பெறும் தருவாயில் இருக்கும் நிலையில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் இறுதியோடு ஜெயசூர்யாவின் பயிற்சி காலம் முடிவுக்கு வந்ததை அடுத்து இலங்கை கிரிக்கெட் வாரியம் இன்னும் ஒரு வருடத்திற்கு அவரது பயிற்சிக் காலத்தை நீட்டித்துள்ளது.

இதையும் படிங்க:ஒவ்வொரு பந்தும் பறக்கும்.. பங்களாதேஷ் டி20க்கு இந்தப் பையன் இதுல ஸ்பெஷலா ரெடி ஆகுறாரு – தினேஷ் கார்த்திக் பேட்டி

இலங்கை அணி தற்போது புது உத்வேகம் பெற்றிருக்கும் நிலையில், அதற்குக் காரணமாக அமைந்த ஜெய சூர்யாவின் பதவிக்காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டித்து புதிய நம்பிக்கையை அளித்து இருக்கிறது. எனவே அவரது பயிற்சியில் இன்னும் இலங்கை அணி பல வெற்றிகளை குவிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

- Advertisement -