நான் பேசும் சீனியர் வீரர்கள் ஆட்டத்தை எடுத்துச் சென்று பெரிய ஸ்கோர் அடினு சொல்லுவாங்க – சதம் விளாசிய பிரப்சிம்ரன் சிங்!

0
627
Prabhsimran

இன்று டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!

டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் மிகச் சிறப்பாக விளையாடி 61 பந்தில் சதம் அடித்து 65 பந்தில் 103 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

பஞ்சாப் அணி இந்த போட்டியில் ஏழு விக்கெட் இழப்புக்கு எடுத்த ரன்கள் 167தான். உடன் விளையாடிய யாரும் சரியான ஒத்துழைப்பு தராத பொழுது தனி ஒரு வீரராக நின்று பஞ்சாப் அணியைக் கரை சேர்த்தார் பிரப்சிம்ரன் சிங்!

தொடர்ந்து விளையாடிய டெல்லி கேப்பிட்டல் அணிக்கு முதல் விக்கட்டுக்கு 6.2 ஓவரில் 69 ரன்கள் வந்தும் அடுத்த 67 ரன்களுக்கு எட்டு விக்கெட்டுகள் இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து, இந்த ஐபிஎல் தொடரில் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பிலிருந்து டெல்லி வெளியேறியது.

சதம் அடித்து ஆட்ட நாயகன் விருது பெற்ற பிரப்சிம்ரன் சிங் பேசும்பொழுது
“நாங்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் விக்கெட்டுகளை இழந்து விட்டோம். எனவே ஆட்டத்தை கொஞ்சம் பொறுமையாகக் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது.

- Advertisement -

நான் நீண்ட காலமாக பஞ்சாப் அணி உடன் இருந்து வருகிறேன். உங்களுக்கு மீண்டும் வாய்ப்புகள் கிடைக்கும் பொழுது அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

தொடக்கத்தில் விக்கெட் கடினமாக இருந்தது. இதனால் சில பார்ட்னர்ஷிப்ளை உருவாக்கி ஒரு சில பந்துவீச்சாளர்களை குறி வைத்து அடிப்பதாக திட்டம் தீட்டப்பட்டது.

நான் பேசும் மூத்த வீரர்கள் எனக்கு கிடைக்கும் நல்ல தொடக்கத்தை எடுத்துக்கொண்டு ஆட்டத்தை ஆழமாக சென்று பெரியதாக முடிக்க வேண்டும் என்று கூறுவார்கள். வாய்ப்புகள் வழங்கிய நிர்வாகத்திற்கு உண்மையிலேயே நன்றி!” என்று கூறினார்!