“நாங்க தொடர்ச்சியா ஜெயிக்கிறதுக்கு முக்கிய காரணம் இதுதான்!” – கேஎல்.ராகுல் பத்திரிகையாளர்களுக்கு சொன்ன மாஸ் பதில்!

0
710
Rahul

நாளை இந்திய அணி லக்னோ மைதானத்தில் இங்கிலாந்து அணியைச் சந்தித்து விளையாட இருக்கிறது. இங்கிலாந்து அணி ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்து விட்டாலும் கூட, இந்திய அணியின் தொடர்ச்சியான வெற்றி தொடர வேண்டும் என்பதால் முக்கியமான போட்டியாக அமைந்திருக்கிறது.

தற்பொழுது இந்திய அணிக்கு இங்கிலாந்து, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து என நான்கு அணிகளுக்கு எதிரான போட்டிகள் மீதம் இருக்கிறது.

- Advertisement -

இதிலிருந்து இந்திய அணி ஒரு போட்டியை வென்றால் கூட அரை இறுதியில் இருப்பது உறுதி. எனவே அரையிறுதி வாய்ப்பை இழந்த இங்கிலாந்துக்கு எப்படி நெருக்கடி கிடையாது, அதேபோல் இந்திய அணிக்கும் நெருக்கடி கிடையாது.

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் செயல்பாடு பௌலிங், ஃபீல்டிங், பேட்டிங் என எல்லா பக்கமும் மிகச் சிறப்பாக இருந்து வருகிறது. இதனால் இந்திய அணி தொடர்ச்சியான ஐந்து வெற்றிகளை பெற்றிருக்கிறது.

இது குறித்து இந்திய அணியின் கேஎல்.ராகுலிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்ப, அவர் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்ன என்கின்ற தகவலை வெளியிட்டிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “உண்மையை சொல்வது என்றால், நாங்கள் இதுவரை விளையாடிய எந்த ஆட்டத்திலும், எதிரணிகளைப் பற்றி யோசிப்பதே கிடையாது. பேச்சுப் பெரும்பாலும் எங்கள் அணி பற்றிதான் இருக்கும்.

எதிரணி குறித்து நாங்கள் ஹோம் ஒர்க் செய்வது மிகவும் குறைவுதான். இங்கிலாந்து தற்பொழுது நடப்பு சாம்பியனாக இருக்கிறது. அவர்கள் சில தோல்விகளைப் பெற்றிருக்கலாம். ஆனால் அவர்கள் பலவீனமானவர்கள் கிடையாது. அவர்கள் இன்னும் ஆபத்தான அணிதான்.

கடந்த சில ஆட்டங்களில் அவர்களுக்கு எதிராக நாங்கள் எப்படி விளையாடியிருக்கிறோம் என்பது குறித்து நாங்கள் பார்க்க மாட்டோம். நாளை என்ன செய்யலாம் என்பதை மையமாக வைத்து, மீண்டும் போட்டியிட்டு அவர்களை வெல்ல முயற்சி செய்வோம்!” என்று கூறி இருக்கிறார்!