510 ரன்.. சூரிய குமாரின் மும்பைக்கு தமிழக அணி மெகா டார்கெட்.. கேப்டன் சாய் கிஷோர் அசத்தல்.. புச்சி பாபு 2024

0
5858
Kishore

தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் வடிவிலான புச்சி பாபு தொடரில் மும்பை அணிக்கு தமிழக அணி 510 ரன்கள் மெகா டார்கெட்டை நிர்ணயித்திருக்கிறது. நட்சத்திர வீரர்கள் கொண்ட மும்பை அணிதமிழக அணியிடம் தடுமாறி வருகிறது.

மும்பை அணியில் சூரியகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், சர்பராஸ் கான் அவரது தம்பி முசீர் கான் மற்றும் சாம்ஸ் முலானி போன்ற நட்சத்திர வீரர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். அதே சமயத்தில் இளம் வீரர்கள் கொண்ட தமிழக அணி மிகச் சிறப்பான முறையில் அனுபவ மும்பை அணிக்கு நெருக்கடி கொடுத்து தோல்வியின் பக்கம் தள்ளி இருக்கிறது.

- Advertisement -

முதல் இன்னிங்ஸ் முன்னிலை

இந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழக அணியின் கேப்டன் சாய் கிஷோர் முதலில் தைரியமாக பேட்டிங்கை தேர்வு செய்தார். தமிழக அணிக்கு முதல் இன்னிங்ஸில் பிரதோஷ் ரஞ்சன் பால் 65, பாபா இந்திரஜித் 61, பூபதி குமார் 82, அஜித் ராம் 53 என நால்வர் அரை சதம் அடிக்க, தமிழக அணி 379 ரன்கள் குவித்தது. மும்பை தரப்பில் ஹிம்மன்சு சிங் ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.

தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய மும்பை அணி 156 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மும்பை அணியின் துவக்க ஆட்டக்கார திவ்யனாஸ் சக்சேனா சிறப்பாக விளையாடி 70 ரன்கள் எடுத்தார். இவருக்கு அடுத்தபடியாக நட்சத்திர வீரர் சூரியகுமார் 30 ரன்கள் எடுத்தார். தமிழக அணியின் தரப்பில் சாய் கிஷோர் 5 மற்றும் லக்சய் ஜெயின் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

510 ரன் மெகா இலக்கு

இதற்கு அடுத்து மூன்றாவது நாளில் 223 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை விளையாடிய தமிழக அணி 286 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. தமிழக அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் ஆதிஷ் 57, லோகேஷ்வர் 73, மோஹித் ஹரிஹரன் 66 ரன்கள் எடுத்தார்கள். மும்பை அணியின் தரப்பில் பந்துவீச்சில் தனுஷ் கோட்டியன் 5 விக்கெட் கைப்பற்றினார். தற்போது தமிழக அணி 509 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது.

இதையும் படிங்க : ஆஸி செய்யும்போது இதை இந்தியா செய்ய முடியாதா?.. கஷ்டப்படற எங்ககிட்ட ஏன் பறிக்கிறிங்க – பாக் கம்ரன் அக்மல் விமர்சனம்

மும்பை அணி 510 ரன்கள் மெகா இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பில்லாமல் 6 ரன்கள் எடுத்திருக்கிறது. இந்தத் தொடர் நான்கு நாட்கள் கொண்ட போட்டி என்பதால் நாளை இந்த போட்டியின் கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பதால் மும்பை அணி தோல்வி அடைவதற்கே அதிக வாய்ப்புகள் உண்டு. மேலும் டிரா ஆனால் கூட முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் தமிழக அணைக்கு கூடுதல் புள்ளிகள் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது!

- Advertisement -