ஆஸி செய்யும்போது இதை இந்தியா செய்ய முடியாதா?.. கஷ்டப்படற எங்ககிட்ட ஏன் பறிக்கிறிங்க – பாக் கம்ரன் அக்மல் விமர்சனம்

0
820
Akmal

அடுத்த வருடம் பாகிஸ்தான் நாட்டில் நடைபெற இருக்கும் ஐசிசி சாம்பியன் டிராபி தொடருக்கு இந்திய அணி வந்து விளையாட வேண்டும் என்று கம்ரன் கோரிக்கை வைத்ததோடு பிசிசிஐ செயல்பாட்டையும் விமர்சனம் செய்திருக்கிறார்.

கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அரசியல் காரணங்களால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு தனிப்பட்ட முறையில் கிரிக்கெட் தொடர்கள் எதுவும் நடத்தப்படுவதில்லை. இரு அணிகளுமே ஐசிசி தொடர்களில் மட்டும் விளையாடுகின்றன. இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி தொடர்களுக்கு பாகிஸ்தான் வந்திருக்கிறது. தற்போது பாகிஸ்தானில் நடக்கும் ஐசிசி தொடருக்கு இந்தியா செல்ல மறுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆஸ்திரேலியா செய்வதை இந்தியா செய்ய வேண்டும்

இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கம்ரன் அக்மல் கூறும் பொழுது “நான் இந்தியாவிற்கு சென்று விளையாடி ஏதும் இந்திய அணிக்கு எதிராக உள்நாட்டில் விளையாடியதையும் பெரிய அதிர்ஷ்டமாக கருதுகிறேன். அந்த நேரங்களை என் கிரிக்கெட் வாழ்க்கையில் நான் மிகவும் ரசித்தேன். இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவேண்டும். பாகிஸ்தான் அணியும் இந்தியாவிற்கு சென்று விளையாட வேண்டும். அரசியல் விஷயங்களை ஒதுக்கி வைத்துவிட்டு கிரிக்கெட்டை நேசிப்போம்”

“ஆஸ்திரேலியா போன்ற ஒரு அணி பாகிஸ்தானுக்கு வந்து விளையாடும் பொழுது இந்தியா ஏன் பாகிஸ்தானுக்கு வந்து விளையாட முடியாது என்று சொல்கிறது. இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இருதரப்பு தொடர் நடைபெற வேண்டும். இது குறித்து இருநாட்டு அரசுகளும் உட்கார்ந்து பேச வேண்டும்”

- Advertisement -

கஷ்டப்படும் பாகிஸ்தானிடம் பறிக்காதீர்கள்

“முதலில் எங்களிடமிருந்து 2023 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை தொடரை பறித்தீர்கள். இப்போது எங்கள் நாட்டில் நடக்க இருக்கும் சாம்பியன் டிராபி தொடரையும் பறிக்க பேசுகிறீர்கள். நாங்கள் சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தானுக்கு கொண்டு வருவதற்கு மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறோம். இப்படி ஏன் செய்கிறீர்கள்?”

இதையும் படிங்க : பங்களாதேஷ் டெஸ்ட்.. பாகிஸ்தான் 12 பேர் அணி அறிவிப்பு.. ஷாகின் அப்ரிடி நீக்கம்.. அதிரடி மாற்றங்கள்

“இந்தியா பாகிஸ்தான் அணியை விளையாட அழைத்தால் ஒரு போதும் எங்கள் அரசாங்கம் அதை தடுக்காது. போய் விளையாடுங்கள் என்று தான் சொல்லும். இந்தியாவும் இப்படியே செய்ய வேண்டும். அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு நாம் கிரிக்கெட் விளையாடுவோம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -