“முதல் மேட்ச்க்கு இந்த டீம கொண்டு போங்க.. ஆஸியை சும்மா அடிக்கலாம்!” – ஜாகிர் கான் தந்த மாஸ் டீம் ஐடியா!

0
5836
Zaheer

கிரிக்கெட் ரசிகர்களின் பலத்தை எதிர்பார்ப்புகளுக்கு இடையே நேற்று ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் ஆரம்பித்து, மிகவும் சிறப்பான முறையில் செல்கிறது.

இந்த நிலையில் இன்று பாகிஸ்தான் அணி ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நெதர்லாந்து அணியை தனது முதல் போட்டியில் சந்திக்க இருக்கிறது.

- Advertisement -

இந்திய அணி நாளை மறுநாள் அக்டோபர் எட்டாம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக பல பரிட்சை நடத்த இருக்கிறது.

தற்போது இந்த போட்டியில் இந்திய அணிக்கு ஒரு பின்னடைவாக இளம் வீரர் சுப்மன் கில் டெங்கு பாதிப்பு அடைந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் உலகக்கோப்பை முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாட மாட்டார் என்றும் தெரிய வருகிறது.

இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் ஆடுகளத்தில் எப்படியான அணியை கொண்டு சென்றால் ஆஸ்திரேலிய எளிதில் வெல்ல முடியும் என்று, இந்திய அணியின் முன்னாள் லெஜன்ட் வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான் தன்னுடைய பார்வையை முன் வைத்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து கூறியுள்ள ஜாகிர் கான் “நீங்கள் சென்னையில் விளையாடும் பொழுது முதல் விவாதம் எதற்காக என்றால் நீங்கள் மூன்று சுழற் பந்துவீச்சாளர்களுடன் விளையாட வேண்டும். அங்கு ஹர்திக் பாண்டியா உடன் சேர்ந்து பும்ரா மற்றும் சிராஜ் என மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் இருப்பார்கள். மேலும் மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் இடம்பெறும் பொழுது சர்துல் தாக்கூர் இடத்தை இழப்பார் என்று நினைக்கிறேன்.

பொதுவாக நீங்கள் மெதுவான மற்றும் டர்னிங் விக்கெட்டோடு சென்னை விக்கெட்டை தொடர்பு படுத்துகிறீர்கள். ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் என எங்களிடம் மூன்று உலகத் தரமான சுழற் பந்துவீச்சு தாக்குதல் உள்ளது.

ஆஸ்திரேலியா சுழற் பந்துவீச்சுக்கு எதிராக தடுமாறியதை சமீபத்தில் நாங்கள் பார்த்தோம். முதல் இரண்டு ஆட்டங்களில் அவர்கள் தோல்வி அடைந்தார்கள். பந்து திரும்பாத விக்கெட் கிடைத்த மூன்றாவது போட்டியில்தான் அவர்கள் வெற்றி பெற்றார்கள். எனவே சென்னையில் மூன்று சுழற் பந்துவீச்சாளர்களுடன் இந்தியா செல்ல வேண்டும்!” என்று கூறியிருக்கிறார்!