இன்னைக்கு என்னோட வேலை இதுவாதான் இருந்தது.. அதுக்கு இந்த 2 முக்கிய காரணம் இருக்கு – ருதுராஜ் பேட்டி

0
560
Ruturaj

இன்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இறுதிவரை நின்று விளையாடி சிஎஸ்கே அணியின் கேப்டன் வெற்றி பெற வைத்தார். போட்டிக்கு பிறகு வெற்றிக்கான காரணங்கள் குறித்து அவர் பேசியிருக்கிறார்.

இன்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணிக்கு ரியான் பராக் கடைசிவரை களத்தில் இருந்து 35 பந்தில் 47 ரன்கள் எடுத்தார். அந்த அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. சிஎஸ்கே தரப்பில் சிமர்ஜித் சிங் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய சிஎஸ்கே அணி 5 விக்கெட்டுகளை இழந்து 18.2 ஓவரில் டார்கெட்டை அடைந்து வெற்றி பெற்றது. குறைந்த இலக்காக இருந்தாலும் பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளத்தில், சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் மிகவும் பொறுப்பாக 41 பந்தில் 42 ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இந்த போட்டியில் வெற்றிக்குப்பின் பேசிய சிஎஸ்கே கேப்டன் ஒரு ருதுராஜ் “இன்று அணி வெற்றி பெற்றது அற்புதமான உணர்வாக இருக்கிறது. லீக் சுற்றில் எங்களுடைய மைதானத்தில் கடைசி போட்டியில் வெற்றி பெறுவது நன்றாக இருக்கிறது. இதுபோன்ற போன்ற ஒரு மெதுவான விக்கெட்டில் 55 ரன்னுக்கு ஒரு விக்கெட்டை இழந்து இருந்த பொழுது நாங்கள் வெற்றிக்கு பயணம் செய்வதாக உணர்ந்தேன்.

- Advertisement -

இந்த ஆடுகளத்தில் ஒன்று இரண்டு விக்கெட்டுகளை கொடுப்பது எதிரணியை போட்டுக் கொண்டு வந்து விடும். இதன் காரணமாகவே நான் இறுதிவரை விளையாடி போட்டியை முடிக்க வேண்டும் என்று நினைத்தேன். இதே போல் இந்த போட்டியில் இறுதிவரை எங்களுக்கு எந்தவித அழுத்தமும் இல்லை. நான் கடைசி வரை களத்தில் இருப்பது மட்டுமே வேலையாக இருந்தது.

இதையும் படிங்க : நான் இந்த ஒரு விஷயத்துல ஏமாந்துட்டேன்.. ஆனா சிமிர்ஜித் கலக்கிட்டாரு – சஞ்சு சாம்சன் பேட்டி

மேலும் இப்படியான விக்கெட்டுகளில் நாங்கள் விளையாட விரும்புகிறோம். இந்த விக்கெட் எங்கள் சுழற் பந்துவீச்சாளர்களை போட்டிக்குள் கொண்டு வருகிறது. அதே சமயத்தில் பெரிய பக்கத்தில் சிக்ஸர் அடிக்க முடியாத ஆபத்து இருக்கிறது. எங்களுக்கு பேட்டிங் செய்ய சாதகமான விக்கெட் இருக்கும் பொழுது யார்கர் வீச செல்கிறோம். மற்றபடி இப்படியான ஆடுகளங்களில் இன்று செயல்பட்டது போல பந்து வீச நினைக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -