மும்பை ரசிகர்கள் சத்தம் கேட்டாலே போதும், சூரியகுமார் பழைய ஃபார்முக்கு வந்துருவாரு – மும்பை கோச் பேட்டி!

0
164

சூரியாகுமார் யாதவ் மும்பை மைதானத்தில் களமிறங்கி, அந்த கரகோஷத்தை கேட்டாலே மீண்டும் பார்மிற்கு திரும்பி விடுவார் என்று நம்பிக்கையுடன் பேசியுள்ளார் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர்.

ஐபிஎல் தொடரின் 16வது சீசன் விரைவில் துவங்க உள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. எந்த அணி வெற்றிபெறும்? யார் சிறப்பாக செயல்படுவார் என்கிற கணிப்புகளும் வந்து கொண்டிருக்கின்றன.

- Advertisement -

ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு முன்பே பல அணிகளின் முன்னணி வீரர்கள் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர். முழு சீசனில் விளையாட முடியாமல் சிலர் வெளியேறுகின்றனர். சிலர் பாதி சீசனில் தான் மீண்டும் அணிக்கு இணைகின்றனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை பும்ரா இல்லை. சூரியகுமார் யாதவ் சரியான ஃபார்மில் இல்லை. இந்த இரண்டு விஷயமும் சற்று பின்னடைவை தந்திருக்கிறது. சூரியகுமார்

அதாவது சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மூன்று போட்டிகளிலும் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்து பேரதிச்சியை கொடுத்தார்.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இருவரிடமும் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது சூரியகுமார் யாதவ் பற்றியும் கேட்கப்பட்டது. அதற்கு பதில் கூறிய பயிற்சியாளர் மார்க் பவுச்சர்,

“நிச்சயம் சூரியகுமார் யாதவ் மீண்டும் பார்மிற்கு வருவார். எங்களுக்கு அவர் மீது எந்தவித சந்தேகமும் இல்லை. முழு வீச்சில் செயல்படுவார் என்று நம்புகிறோம். மும்பை மைதானத்திற்குள் களமிறங்கினாலே ரசிகர்களின் பார்மிற்கு வந்து விடுவார்” என பேசினார்.

மேலும் பும்ரா இல்லாதது குறித்து பேசிய அவர், “வேகப்பந்துவீச்சில் நாங்கள் பின்னடைவை சந்தித்து இருக்கிறோம் என்று பலரும் கூறுகின்றனர். விரைவில் பும்ராவிற்கு மாற்றுப் வீரர் அறிவிக்கப்படும்.” என மார்க் பவுச்சர் தெரிவித்தார்.