தற்போது இலங்கை ஆண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் போட்டியில் 28 வயதான அறிமுக வீரர் மிலன் ரத்னாயகே 41 வருட இந்திய வீரர்களின் உலக சாதனையை முறியடித்து புதிய சோதனை படைத்திருக்கிறார்.
இந்திய அணிக்கு எதிராக ஒரு நாள் கிரிக்கெட் தொடரை வென்ற புத்துணர்ச்சியில் இங்கிலாந்துக்கு சென்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி நேற்று இங்கிலாந்து மான்செஸ்டர் ஓல்ட் டிராப்போர்டு மைதானத்தில் துவங்கியது.
தைரிய முடிவெடுத்த இலங்கை
தற்போது இலங்கை அணியின் தலைமை பயிற்சிளர் பொறுப்பில் தற்காலிகமாக இருக்கும் சனத் ஜெயசூர்யா இங்கிலாந்து அணி தனது பேட்டிங்கில் முதல் பத்து ஓவர்களில் ஆக்ரோஷமாக ஆரம்பிக்கிறது இதை கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும் நேற்று போட்டியில் டாஸ் வென்று இலங்கை அணி தைரியமாக பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஆனால் இலங்கையணி 113 ரன்கள் எடுத்து ஏழு முக்கிய விக்கெட்டுகளை இழந்து விட்டது. இந்த நிலையில் 9வது வீரராக வந்த அறிமுக வீரர் மிலன் ரத்நாயகி கேப்டன் தனஞ்செய டி சில்வாவுடன் இணைந்து 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். இதற்கு அடுத்து விஷ்வா பெர்னாடோ உடன் இணைந்து 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.
உடைந்த 41 வருட உலகச்சாதனை
இறுதியாக 135 பந்துகளை சந்தித்து 72 ரன்கள் எடுத்து இலங்கை அணியை ஓரளவுக்கு தனது அறிமுக போட்டியிலேயே காப்பாற்றி மிலன் ரத்னாயகே வெளியேறினார். இதுவரையில் 9வது விக்கெட்டுக்கு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுக்கப்பட்ட மிக அதிகபட்ச ரன்னாக, 1983 ஆம் வருடம் ஹைதராபாத்தில் பாகிஸ்தானுக்கு இந்திய வீரர் பல்விந்தர் சந்து 71 ரன் எடுத்தது இருந்தது. இந்த 41 வருட உலக சாதனையை இவர் முறியடித்திருக்கிறார்.
இதையும் படிங்க : ஐபிஎல்-ல் கம்பீர் என்னிடம் இதைத்தான் கேட்டார்.. அதுதான் என் வாழ்க்கையின் சிறந்த பயிற்சி – பில் சால்ட் பேச்சு
பல்விந்தர் சந்து 1983 ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் இந்திய அணி உலக கோப்பையை வென்ற பொழுது முக்கிய வீரராக இந்திய அணியில் இடம் பெற்று இருந்தார். இந்த மகத்தான சாதனையை முறியடித்ததன் மூலம் இலங்கை அணியின் மிலன் ரத்னாயகே இலங்கை கிரிக்கெட்டில் நீண்ட காலத்திற்கு நினைவு வைக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.