இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு நுழைந்த இங்கிலாந்து விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் பில் சால்ட் 12 போட்டியில் 435 ரன்கள் அடித்தார். இந்த நிலையில் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தனக்கு எவ்வளவு ஊக்கம் கொடுத்தார் என்பது குறித்து பேசி இருக்கிறார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து ஜேசன் ராய் திடீரென விலகிக் கொள்ள அது அந்த அணிக்கு நல்ல விஷயமாக மாறியது. அந்த இடத்திற்கு விக்கெட் கீப்பிங் அதிரடி பேட்ஸ்மேன் பில் சால்ட் கிடைத்தார். அவர் சுனில் நரைனுடன் இணைந்து அதிரடியான துவக்கங்களை கொடுத்து எதிரணிகளை மிரள விட்டார்.
இங்கிலாந்து அணியில் கிடைத்த வாய்ப்பு
ஐபிஎல் தொடரில் பில் சால்ட் மிகச் சிறப்பாக விளையாடியது டி20 உலகக்கோப்பை தொடரில் எந்தவித சந்தேகமும் இன்றி துவக்க வீரராக அவருடைய இடத்தை உறுதி செய்தது. மேலும் அவர் தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் எந்த மாதிரியான அணுகுமுறையை பேட்டிங்கில் வெளிப்படுத்தப் போகிறார் என்பதையும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெளிப்படுத்தியது.
தற்போது பில் சால்ட் மிக வேகமாக இங்கிலாந்து வெள்ளை பந்து அணிகளின் முக்கிய விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக உயரக்கூடிய இடத்தில் இருக்கிறார். தற்போது அவர் இந்தியாவில் சியட் கிரிக்கெட் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பயிற்சியாளராக கம்பீர் தனக்கு என்ன மாதிரியான சிறந்த யோசனைகளை வழங்கினார் என்று கூறியிருக்கிறார்.
10 முதல் 20 ஓவர்கள்
இதுகுறித்து பில் சால்ட் கூறும்பொழுது “நான் கம்பீரிடம் இருந்து பெற்ற மிகச்சிறந்த அறிவுரை என்னவென்றால், இந்தியாவில் நிலைத்து நின்று விளையாடினால் நன்கு கிடைக்கும் என்பதுதான். நான் ஐபிஎல் பயிற்சிக்கு சென்றதுமே அவர் என்னிடம் ‘நீங்கள் எப்படியும் நான் அடிக்கப் போகிறீர்கள் என்பது எனக்கு தெரியும். ஆனால் நான் உங்களிடம் 10 முதல் 20 ஓவர்களில் அதிக ரன்கள்” எதிர்பார்க்கிறேன் என்று கூறினார்.
நீங்கள் தொடங்குவது கொஞ்சம் மெதுவாக இருந்தால் பரவாயில்லை. எங்கள் பத்து ஓவர்கள் வரையில் அங்கேயே இருந்தால்உங்களால் நிறைய ரன்கள் பெற முடியும். உங்களுக்கு பெரிய ரங்கள் அடிக்கக்கூடிய ஓவர்கள் கிடைக்கும். உங்களால் விரைவாக ஸ்கோர் செய்ய முடியும் நினைக்கிறேன் என்று என்னிடம் கூறினார். அவர் பயிற்சி அளித்ததில் சிறந்த விஷயம் எதுவென்று நான் நினைக்கிறேன்.
இதையும் படிங்க : பயிற்சியாளர்கள் வீரர்களிடம் ஆதிக்கம் செலுத்துவது சரி கிடையாது.. மோசமான முடிவாகும் – அஸ்வின் கருத்து
கம்பீர் சிறந்த போட்டியாளர். அவருடன் நீங்கள் அந்த கண்ணோட்டத்தில் எல்லா விஷயத்தையும் பேச முடியும். ஒரு வீரர் சிறப்பாக இருக்க என்ன செய்யப் போகிறார் அவர் அணியை எப்படி மேலே கொண்டு வரப் போகிறார் என்று அந்த ஒரு சதவீதத்தை அவர் எல்லா வீரர்களிடமும் தேடுவார். இதன் காரணத்தால் அவருடன் நான் வேலை செய்வதை விரும்பினேன்” என்று கூறியிருக்கிறார்.