ஐசிசி ஒன்பதாவது டி20 உலகக்கோப்பை தொடர் தற்போது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதில் இந்திய அணி நாளை அயர்லாந்து அணிக்கு எதிராக நியூயார்க் மைதானத்தில் முதல் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டிக்கான தன்னுடைய பிளேயிங் லெவனை முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீசாந்த் வெளியிட்டிருக்கிறார்.
தற்போதைய சூழ்நிலையில் இந்திய அணியின் தொடக்கட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் வரவேண்டும் என்பதுதான் பல முன்னாள் வீரர்களின் விருப்பமாக இருக்கிறது. இந்த நிலையில் ஸ்ரீசாந்த் ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா இருவரும் துவக்கட்டக்காரர்களாக வரவேண்டும் என்று கூறியிருக்கிறார்.
மேலும் அடுத்தடுத்த இடங்களில் விராட் கோலி, சூரியகுமார் யாதவ், ரிஷப் பண்ட் ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இருக்கிறார்கள். வேகப்பந்துவீச்சாளர்களாக பும்ரா மற்றும் அர்ஸ்தீப் இருக்கிறார்கள். மேலும் இரண்டு சுழல் பந்துவீச்சாளர்கள் குல்தீப் மற்றும் சாகல் இருக்கிறார்கள்.
இந்த அணியில் சிஎஸ்கே அணியின் மிதவேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர் சிவம் துபேவுக்கு பதிலாக தன்னுடைய அணியில் ஹர்திக் பாண்டியா தான் இருக்க வேண்டும் எனவும், மேலும் மூன்று சுழல் பந்துவீச்சாளர்கள் விளையாட வேண்டும் எனவும் கூறியிருக்கிறார்.
இத்தோடு தமது அணியில் தொடக்க ஆட்டக்காரர்களில் கண்டிப்பாக இடது கை இளம் பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் இருக்கத் தேவை அதிகம் எனவும் கூறியிருக்கிறார். இவர் தேர்ந்தெடுத்திருக்கும் அணியில் பேட்டிங் வரிசை ஏழு வரை மட்டுமே இருக்கும். இதில் ஹர்திக் பாண்டியா வரை மட்டுமே நம்ப முடியும். தற்போது டி20 சர்வதேச கிரிக்கெட்டில் ரவீந்திர ஜடேஜா பேட்டிங் மிகவும் மந்தமான நிலையில் இருக்கிறது.
இதையும் படிங்க : முதல்ல நாங்க இந்த விஷயத்தை செய்யறோம்.. எங்களுக்கு பெரிய பிரச்சனையா அதுதான் இருக்கு – ராகுல் டிராவிட் பேச்சு
2024 டி20 உலக கோப்பைக்கு ஸ்ரீசாந்த் தேர்ந்தெடுத்திருக்கும் இந்திய பிளேயிங் லெவன் :
ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால், சூர்யா குமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், பும்ரா, அர்ஸ்தீப் சிங் மற்றும் சாகல்.