கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தென்னாப்பிரிக்க வீரர் கிளாசன் ஒய்வு.. குடும்பத்திற்காக முடிவு எடுத்ததாக கருத்து

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஹென்ரிக் கிளாசன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதிரடி விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான இவர், 2018 ஆம் ஆண்டு கேப் டவுனில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்காக அறிமுகமானார்.

- Advertisement -

7 ஆண்டுகளுக்கு பிறகு தன்னுடைய ஓய்வு முடிவை அறிவித்துள்ளார் கிளாசன். தனது இன்ஸ்டாகிராம் பதிவில், இது மிகவும் உணர்ச்சிகரமான முடிவு என்றும், இந்த முடிவை எடுக்க நீண்ட நேரம் எடுத்துக்கொண்டதாகவும் தெரிவித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகுவது கடினமான முடிவாக இருந்தாலும், தனக்கும் தனது குடும்பத்திற்கும் இது சிறந்த தேர்வு என்று அவர் குறிப்பிட்டார்.

குடும்பத்திற்காக எடுத்த முடிவு:

தனது நாட்டின் மீது மிகுந்த மரியாதை கொண்டிருப்பதாகவும், உலக அரங்கில் தென்னாப்பிரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தியதில் பெருமை அடைவதாகவும் அவர் கூறினார்.
“நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக அறிவிக்கும் இந்த நாள் எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. எனக்கும் என் குடும்பத்தின் எதிர்காலத்திற்கும் எது சிறந்தது என்பதை முடிவு செய்ய நீண்ட நேரம் எடுத்துக்கொண்டேன்.”

“இது மிகவும் கடினமான முடிவு, ஆனால் முழுமையான மன அமைதியுடன் எடுத்த முடிவு,முதல் நாள் முதல், என் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவது மிகப்பெரிய பாக்கியமாக இருந்தது. இது ஒரு சிறு பையனாக நான் வேலை செய்து கனவு கண்டவற்றின் உச்சம்,” என்று அவர் கூறினார்.

- Advertisement -

கிளாசன் செயல்பாடு:

33 வயதான கிளாசன், தென்னாப்பிரிக்காவுக்காக 60 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 43.69 சராசரியுடன் 2141 ரன்கள் எடுத்தார். மேலும், 58 டி20 பன்னாட்டு போட்டிகளில் விளையாடி 1,000 ரன்கள் குவித்தார். கிளாசன் தனது சர்வதேச வாழ்க்கையில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 104 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இதையும் படிங்க: 196 ரன்.. முகமது ஹாரிஸ் 46 பந்தில் சதம்.. பங்களாதேஷ் ஓயிட் வாஸ்.. புது பாகிஸ்தான் அணி தொடரை வென்றது

கிளாசன் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு ஃப்ரான்சைஸ் லீக்களில் குறிப்பிடத்தக்க வீரராக இருந்து வருகிறார். சமீபத்தில், அவர் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2025 சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார். SRH அவரை 23 கோடி ரூபாய்க்கு IPL 2025-க்காக தக்கவைத்தது. 2016 சாம்பியன்களுக்காக அவர் 14 போட்டிகளில் 487 ரன்கள், உட்பட ஒரு சதத்துடன், சிறப்பான பங்களிப்பை அளித்தார்.

- Advertisement -
Published by