பிசிசிஐ தலைவர் பதவிலிருந்து விலகுகிறார் சவுரவ் கங்குலி – வெளியான தகவல்!

0
4728

பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து கங்குலி விலகுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை மேற்கு வங்காள கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்தார். 2019 ஆம் ஆண்டு பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐசிசி எலைட் உறுப்பினர்கள் கமிட்டியில் புதிய உறுப்பினராக சேர்க்கப்பட்டார். அணில் கும்ப்ளே பதவிக்காலம் முடிவடைந்ததால் அந்த இடத்திற்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

- Advertisement -

சௌரவ் கங்குலி தனது பிசிசிஐ பதவி காலத்தில் அதிகமாக பிசிசிஐ செயலாளர் ஜே ஷா, பொருளாளர் அருண் துமாள் ஆகியோருடன் நீண்ட காலம் பயணித்திருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சவுரவ் கங்குலி ஐசிசி சேர்மன் பதவிக்கு போட்டியிட உள்ளார். அதில் தேர்ந்தெடுக்கப்பட்டால், பிசிசிஐ தலைவர் பதவியை ராஜினாமா செய்வார் பல வதந்திகள் வெளியாகின. ஆனால் அதன்படி எதுவும் நடக்கவில்லை.

இந்நிலையில் டெல்லியில் நேற்றைய தினம் நடைபெற்ற பிசிசிஐ தலைவர்கள் சந்திப்பில் பல முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த சந்திப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் என் ஸ்ரீனிவாசன், அசாம் மாநிலத்தின் முதலமைச்சர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர். இதில் பல முடிவுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதில் ஒன்றாக பிசிசி தலைவர் பதவியில் இருந்து சவுரவ் கங்குலி நீக்கப்பட உள்ளார். ஜே ஷா தொடர்ந்து செயலாளர் பதவியிலும், அருண் துமால் பொருளாளர் பதவியிலும் தொடர்ந்து நீடிக்க உள்ளனர்.

ராஜீவ் சுக்லா, அனிருத் சவுத்ரி, ரோகன் ஜெட்லி உள்ளிட்டோர் பிசிசிஐ மேல்மட்ட குழுவின் உறுப்பினர் பதவியில் நீடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இவர்களுக்கு ஐபிஎல் நிர்வாகத்திலும் சில பதவிகள் கொடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

அடுத்த பிசிசிஐ தலைவராக யார் நியமிக்கப்பட உள்ளார்? என்கிற விவாதங்கள் தொடர்ந்து நிலவி வந்திருக்கின்றன. அதில் 1983ம் ஆண்டு உலக கோப்பை வென்ற இந்திய அணியில் ஆல்ரவுண்டராக செயல்பட்ட, முன்னாள் இந்திய வீரர் ரோஜர் பின்னி பெயர் அடிபடுகிறது. பெரும்பாலானோர் இவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று விவாதித்ததாகவும் தெரிய வந்திருக்கிறது. இது குறித்து அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது.

மேலும் கங்குலி அதிகபட்சமாக அக்டோபர் 18ஆம் தேதி வரை பிசிசிஐ தலைவர் பதவியில் நீடிப்பார். அதன்பிறகு புதிய பிசிசிஐ தலைவர் நியமிக்கப்பட உள்ளார் என தெரிய வந்திருக்கிறது.