சிராஜ் சமி போல 140 கிமீ மேல வேகம்.. அந்த பையன வங்கதேச தொடரில் பார்க்க காத்திருக்கிறேன் – கங்குலி பேட்டி

0
192

வங்கதேசம் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் இன்னும் சில தினங்களில் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணியை சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

இதில் சில முன்னணி இந்திய வீரர்கள் அணிக்குத் திரும்பி இருக்கும் சூழ்நிலையில் இந்திய அணியின் இளம் வீரர் குறித்து சௌரவ் கங்குலி சில முக்கிய கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி டெஸ்ட் தொடரில் மிகச்சிறந்த விளக்குவதற்கு காரணமாக வேகப்பந்துவீச்சு முக்கிய பங்காற்றுகிறது. சுழற்பந்து வீச்சு மட்டுமே இந்திய அணியின் பிரம்மாஸ்திரமாக இருந்ததைத் தொடர்ந்து கோலி கேப்டனாக பொறுப்பேற்ற பின்னர், ஆக்ரோஷமான தாக்குதலை அணிக்குள் கொண்டு வர விரும்பி வலுவான வேகப்பந்து வீச்சு கூட்டணியை உருவாக்கினார்.அதில் முகமது சமி, பும்ரா, இசாந்த் சர்மா முகமது சிராஜ், புவனேஸ்வர் குமார் என்று ஒரு நட்சத்திர பட்டாளமே அடங்கியது.

இந்த சூழ்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆகாஷ் தீப் மற்றும் யஸ் தயால் என்ற இரு வேகப்பந்து வீச்சாளர்களும் இந்திய அணியில் இணைந்திருக்கின்றனர். இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக ஆகாஷ் தீப் பெங்காலியை சேர்ந்த கிரிக்கெட் வீரராக இருப்பதை தொடர்ந்து அவரால் நல்ல முறையில் இந்திய அணிக்கு பந்துவீசி சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்த முடியும் என்று சவுரவ் கங்குலி சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “ஆகாஷ் தீப் ஒரு அருமையான இளம் வேகப்பந்துவீச்சாளர். அவரால் வேகமாக ஓடவும், வேகமாக பந்தை வீசவும் முடியும். இந்திய அணிக்கு நீண்ட காலம் சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தக்கூடிய தகுதி அவரிடத்தில் உள்ளது. அவர் தற்போது நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறார். அவர் பெங்கால் அணிக்காக சிறப்பாக விளையாடி விக்கட்டுகள் வீழ்த்தியதை நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன்.

அவர் இந்திய அணியின் தற்போதைய பந்துவீச்சாளர்களான முகமது சமி மற்றும் முகமது சிராஜ் போல 140 கிலோ மீட்டர் வேகத்தில் அவரால் பந்து வீச முடியும். இனி அவர் ஒரு கவனிக்கத்தக்க வீரராக இருப்பார்” என்று கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு விழாவில் தனது கருத்துக்களை கங்குலி பகிர்ந்திருக்கிறார். எனவே ஆகாஷ் தீப் இந்திய அணியின் எதிர்கால பந்துவீச்சாளராக திகழ்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:WTC புள்ளி பட்டியல்.. ஓரே ஒரு தோல்வி.. இங்கிலாந்தை முந்திய இலங்கை அணி.. இந்திய அணிக்கு எந்த இடம்.?

சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்டில் களமிறங்கிய ஆகாஷ் தீப் அந்த போட்டியில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் என்று குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் துலீப் டிராபி மற்றும் ஐபிஎல் தொடரில் பெரிதாக விளையாடவில்லை என்றாலும் துலீப் ட்ராபி தொடரில் ஒரு போட்டியில் ஒன்பது விக்கெட்டுகள் வீழ்த்தி கவனிக்கத்தக்க வீரராக மாறி இருக்கிறார்.

- Advertisement -