சிவம் துபே ஆர்சிபி ட்ரஸ்ஸிங் ரூமில் சுதந்திரமாக இருந்ததில்லை – உண்மையை உடைத்த ஏபி.டிவில்லியர்ஸ்

0
2101
Dube

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் 4 கோடி ரூபாய்க்கு சிவம் துபே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது. தற்போது அவரால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு என்ன நன்மை ஏற்பட்டிருக்கிறதோ, அதைவிட அதிகமாக அந்த அணி நிர்வாகம் அவருடைய தனிப்பட்ட கிரிக்கெட் வாழ்க்கையில் முன்னேற்றத்தை உருவாக்கி இருக்கிறது.

சிவம் துபே பேட்டிங் அணுகுமுறை மற்றும் அவருக்கு ஷார்ட் பந்துகளில் இருக்கும் பிரச்சனை ஆகியவற்றில் சிஎஸ்கே அணி நிர்வாகம் அவர் அணிக்குள் வந்ததுமே கவனம் செலுத்த ஆரம்பித்தது. இதில் ஸ்டீபன் பிளமிங் பயிற்சியாளர் குழு ஒரு பக்கம் வேலை செய்ய, இன்னொரு பக்கம் மகேந்திர சிங் தோனி அவருடைய பிரச்சனைக்கான தீர்வுகளை அவரிடம் பேசி சரி செய்திருந்தார்.

- Advertisement -

தோனி சிவம் துபேவுக்கு களத்தில் அதிக நேரம் இருப்பதின் மூலம் ரன்களை கொண்டுவர முடியும், அதே சமயத்தில் அதற்கு பந்தை தரையில் ஆட வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்தும் புரிய வைத்திருந்தார். மேலும் சிவந்து துபேவுக்கு இருக்கும் உயரம் மற்றும் பலத்தின் காரணமாக சுழல் பந்துவீச்சை மிடில் ஓவர்களில் தாக்கி விளையாடும் பொறுப்பு அவருக்கு கொடுக்கப்பட்டது. அவருடைய பேட்டிங் அணுகுமுறை மாற்றப்பட்டதோடு அவருக்கான ரோல் என்ன என்பதும் தெளிவாக்கப்பட்டது.

இதற்கு முன்பு சிவம் துபே இடம் பெற்று விளையாடிய ஆர்சிபி அணியின் லெஜன்ட் ஏபி.டிவில்லியர்ஸ் கூறும் பொழுது “சிவம் துபாய் இப்படி பார்ப்பது மிகவும் அருமையாக இருக்கிறது. ஆர்சிபி டிரெஸ்ஸிங் ரூமில் அவர் ஒருபோதும் சுதந்திரமாக இருந்தது கிடையாது. ஆர்சிபி பணியில் இருந்த பொழுது சந்தேகங்களுக்கு நிறைய கேள்விகளை கேட்டு, கடினமாக உழைத்து சில விஷயங்களை அந்த காலகட்டத்தில் தெரிந்து கொண்டார். ஆனால் அங்கு அவர் வசதியாக இல்லை என்பதுதான் உண்மை.

அவர் தற்போது சிஎஸ்கே அணியில் சுதந்திரமாக இருப்பதைப் பற்றி பேசுகிறார். இதுதான் சிஎஸ்கே அணியில் தோனி பிளம்மிங் மற்றும் ருதுராஜ் மேலும் அந்த ஏற்கனவே இருந்தவர்கள் என எல்லோரும் உருவாக்கி இருக்கும் மேஜிக் செயல் முறையாகும். இது ஒவ்வொரு முறையும் வீரர்களை செயல்பட வைக்கும் அற்புதமான முறை. ஒவ்வொரு முறைஉள்ளே வரும் புதிய வீரர்களும் செயல்பட தயங்குவார்கள். ஆனால் சிஎஸ்கே அணியில் அந்த தயக்கம் இருக்காது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : வீடியோ.. எனக்காக எத்தனை முறை பண்ணியிருக்க.. இப்ப உனக்காக பண்றேன் – அஸ்வின் ரிஷப் பண்ட்க்காக செய்த விஷயம்

இதன் காரணமாக சிவம் துபே தன்னுடைய வேலையை மிகக் கச்சிதமாக செய்து வருகிறார். மேலும் ஆட்டத்தை இறுதி வரையில் நின்று முடிக்கும் குணத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார். இதன் காரணமாக வேகமாக சிஎஸ்கே அணியின் பேட்ஸ்மேன்கள் ரேங்க் வரிசையில் முதலிடத்தை பிடிப்பதற்கான போட்டியில் முன்னேறிக் கொண்டிருக்கிறார்.