நான் திறமையா இருந்தாலும் செலக்ட் பண்ண மாட்டாங்க.. செலக்சன் நடக்கிறது வேற மாதிரி – சஞ்சு சாம்சன் பேட்டி

0
1013
Sanju

நடப்பு ஐசிசி 9வது டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வில் அஜித் அகர்கர் தலைமையிலான இந்திய தேர்வுக்குழு, இரண்டு விக்கெட் கீப்பர்களில் சஞ்சு சாம்சனை ஒருவராகத் தேர்ந்தெடுத்தது. இது குறித்து தற்பொழுது சஞ்சு சாம்சன் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. மொத்தம் 15 போட்டிகளில் விளையாடிய சஞ்சு சாம்சன் அதிகபட்சமாக 86 ரன்கள் உடன், நான்கு முறை ஆட்டம் இழக்காமல் இருந்து, 48 ஆவரேஜ் மற்றும் 153 ஸ்ட்ரைக் ரேட்டில் 531 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

ஐபிஎல் தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது ஏப்ரல் மாதம் இறுதியில் இந்திய தேர்வு குழு டி20 உலகக்கோப்பை இந்திய அணி அறிவித்தது. அப்பொழுது ஒரு விக்கெட் கீப்பராக ஏறக்குறைய ரிஷப் பண்ட் தேர்வாகி இருந்தார். ஆனால் இரண்டாவது விக்கெட் கீப்பருக்கு கே எல் ராகுல் மற்றும் சஞ்சு சாம்சனுக்கு இடையே கடுமையான போட்டி இருந்தது.

இந்த நேரத்தில் லக்னோ அணிக்கு எதிராக இறுதிவரை நின்று சஞ்சு சாம்சன் பெரிய அரைசதம் ஒன்றை அடித்து ராஜஸ்தான் அணியை வெற்றி பெற வைத்து ஆட்ட நாயகன் விருது வென்றார். அந்தப் போட்டி அவரை நேரடியாக டி20 உலகக்கோப்பை இந்திய அணிக்குள் கொண்டு வந்து விட்டது என்று கூறலாம்.

- Advertisement -

தற்பொழுது இது குறித்து பேசி இருக்கும் சஞ்சு சாம்சன் “இந்த உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு தயாரான அனுபவம் வாய்ந்த சஞ்சு சாம்சன் வரலாம். ஏனென்றால் இதற்கு முன்பு பல வருடங்கள், பல தோல்விகள், அங்கும் இங்கும் சில வெற்றிகள் என வாழ்க்கை மற்றும் கிரிக்கெட் இரண்டும் தேவையான எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்துள்ளது. இது முக்கியமான போட்டி என் மனவெளி சம்பந்தப்பட்டது. இந்த நிலையில் எங்கேயோ தேர்வு நடந்தது. நான் தேர்வானது ஒரு பெரிய விஷயம்.

இதையும் படிங்க : டி20 உலக கோப்பை 2024.. இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் மோசமான சாதனை.. கேப்டனின் தவறான முடிவு

இது என் வாழ்க்கையில் நடந்த மிகச் சிறந்த விஷயங்களில் ஒன்று. உலகக் கோப்பை செலக்சன் குறித்து எண்ணங்கள் இருந்து கொண்டே இருந்தது. எனக்கு நல்ல ஐபிஎல் சீசன் இருப்பதை உணர்ந்தேன். எனக்கு டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் நுழைவதற்கான வாய்ப்புகள் இருந்தது. ஆனால் அது கடினம் என்பதையும் அறிவேன். செலக்சன் என்பது அணிக்கு என்ன தேவை மற்றும் செலக்சன் கமிட்டி என்ன மாதிரியான காம்பினேஷனை தேடுகிறது என்பதை பொறுத்தது. ஆனால் என்னைப் பற்றி நம்பிக்கையுடன் இருந்தேன். கிரிக்கெட்டும் எனக்கு தற்பொழுது திருப்பிக் கொடுத்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -