இன்று பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியது தொடர்பாக இந்திய கேப்டன் ரோகித் சர்மாவை சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் துவங்கியது. மழையின் காரணமாக இன்று போட்டி 34 ஓவர்கள் மட்டுமே நடைபெற்று முடித்துக் கொள்ளப்பட்டது.
நான்கு பந்துவீச்சாளர்கள்
பங்களாதேஷ் அணி இன்று 34 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்திருக்கிறது. கேப்டன் நஜ்முல் சாந்தோ 31 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மொமினுல் ஹாக் 41 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நிற்கிறார். டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் தேர்வு செய்திருக்க வேண்டும் என்கின்ற விமர்சனங்களும் இருந்து வருகிறது.
இன்று இந்தியா பந்துவீச்சு தரப்பில் அதிகபட்சமாக ஆகாஷ் தீப் 10 ஓவர்கள் வீசி இருக்கிறார். பும்ரா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் 9 ஓவர்கள் வீசியிருக்கிறார்கள். சிராஜ் 7 ஓவர்கள் வீசி இருக்கிறார். இந்த நிலையில் ஐந்தாவது பந்துவீச்சாளரான ரவீந்திர ஜடேஜாவை இன்று இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஒரு ஓவருக்கு கூட கொண்டு வரவில்லை.
பங்களாதேஷின் இடதுகை ஆட்டக்காரர்கள்
பங்களாதேஷ் பேட்டிங் யூனிட்டில் முதல் நான்கு பேட்ஸ்மேன்கள் இடது கை ஆட்டக்காரர்களாக இருக்கிறார்கள். இதன் காரணமாக இடது கை சுழல் பந்துவீச்சாளரான ரவீந்திர ஜடேஜாவை ஆரம்பத்தில் குறைந்தது இரண்டு மூன்று ஓவர்களுக்கு கூட கேப்டன் ரோஹித் சர்மா பயன்படுத்தவில்லை.
இதையும் படிங்க : பும்ரா ஷமி இல்ல.. எங்க கூட இந்த 2 இந்திய பவுலர்கள்.. வெற்றிய முடிவு பண்ணுவாங்க – மேக்ஸ்வெல் பேட்டி
இதுகுறித்து விமர்சித்து இருக்கும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறும் பொழுது “ரோகித் சர்மாவுக்கு இந்த புள்ளி விபரத்தை காட்ட வேண்டும். 2016 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 8 இன்னிங்ஸ்களில் 6 முறை இடதுகை பேட்ஸ்மேன் அலைஸ்டர் குக்கை ஜடேஜா அவுட் செய்திருக்கிறார். மேலும் மேலும் 75 ரன்கள் மட்டுமே கொடுத்திருக்கிறார். களத்தில் இடது கை பேட்ஸ்மேன்கள் இருந்தால் ஜடேஜாவை கேப்டன் ரோகித் சர்மா பந்து வீசவே விடமாட்டேங்கிறார்” என்று கூறியிருக்கிறார்.