மற்ற பேட்ஸ்மேன்கள் சோதப்பலாக ஆட்டமிழக்க, தனி ஆளாக நின்று சதம் விளாசினார் ரோகித் சர்மா.
பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில், முதல் டெஸ்ட் போட்டி நாக்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அதன்பிறகு தனது முதல் இன்னிங்சில் இறங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவின்போது, ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் அடித்திருந்தது. இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை துவங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரோகித் சர்மா இருவரும் நிதானமாக ரன்களை சேர்த்து வந்தனர்
துரதிஷ்டவசமாக, அறிமுக வீரர் டாட் மர்பி பந்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் 23 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த புஜாராவும் அவரசரப்பட்டு தவறான ஷாட் விளையாடி, டாட் மர்பி பந்தில் அவுட்டானார்.
லன்ச் இடைவேளையின்போது, இந்தியா 151/3 என இருந்தது. ரோகித் சர்மா 85 ரன்களிலும், விராட் கோலி 12 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.
லன்ச் இடைவேளை முடிந்து வந்த முதல் பந்திலேயே விராட் கோலி, அறிமுக வீரர் மர்பி பந்தில் 12 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேற, இந்தியா சற்று திணறியது. அடுத்துவந்த சூரியகுமார் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
ஒரு முனையில் இந்திய பேட்ஸ்மேன்கள் சோதப்பலாக சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வந்தாலும், மறுமுனையில் நிலைத்து ஆடிவந்த கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் அரங்கில் தனது 9வது சதத்தை பூர்த்தி செய்தார்.
கேப்டன் பொறுப்பேற்று ரோகித் சர்மா அடிக்கும் முதல் டெஸ்ட் சதம் இதுவாகும். கேப்டனாகவும் புதிய சாதனைகளை செய்திருக்கிறார்.
சதம் அடித்தபோது அவர் வெறித்தனமாக கொண்டாடிய வீடியோ:
Smiles, claps & appreciation all around! 😊 👏
— BCCI (@BCCI) February 10, 2023
This has been a fine knock! 👍 👍
Take a bow, captain @ImRo45 🙌🙌
Follow the match ▶️ https://t.co/SwTGoyHfZx #TeamIndia | #INDvAUS | @mastercardindia pic.twitter.com/gW0NfRQvLY