ஐபிஎல் ஹேட்டர்ஸ் கேட்டுக்கோங்க.. இப்போ புரியுதா எதுக்கு ஐபிஎல் வேணும்னு – ரிங்கு சிங் ஆதரவாக ட்வீட் போட்ட ரோகித் சர்மா!

0
686

“ஐபிஎல் போட்டிகளின் முக்கியத்துவத்தை இப்போது பலரும் அறிந்திருப்பர், ஐபிஎல் இல்லையென்றால் ரிங்கு சிங் போன்ற வீரர்கள் கிடைத்திருக்க மாட்டார்கள்” என்கிற பாணியில் ரிங்கு சிங் அபார ஆட்டத்திற்கு வாழ்த்து ட்வீட் போட்டிருந்தார் ரோகித் சர்மா.

ஏப்ரல் 9ஆம் தேதி நடந்த லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 204 ரன்கள் குவித்தது. தமிழக வீரர்கள் சாய் சுதர்சன்(53) மற்றும் விஜய் சங்கர்(63) இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.

- Advertisement -

205 ரன்கள் எனும் சற்று கடினமான இலக்கை சேஸ் செய்த கொல்கத்தா அணிக்கு கேப்டன் நிதிஷ் ராணா(45)மற்றும் வெங்கடேஷ் ஐயர்(83) இருவரும் 3ஆவது விக்கெட்டுக்கு 55 பந்துகளில் 100 ரன்கள் சேர்த்தனர்.

16 ஓவரில் 155 ரன்கள் அடித்திருந்த கொல்கத்தா அணிக்கு, கடைசி 4 ஓவர்களில் 50 ரன்கள் வெற்றிபெற தேவைப்பட்டது. ரஷித் கான் உள்ளே வந்து ஹாட்ரிக் விக்கெட் எடுத்து ஆட்டத்தை குஜராத் அணியின் பக்கம் திருப்பினார்.

கடைசி ஓவரில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டபோது, ரிங்கு சிங் அடுத்தடுத்து 5 சிக்ஸர்கள் விளாசி, போட்டியின் கடைசி பந்தில் கொல்கத்தா அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

- Advertisement -

அசாத்தியமான வெற்றியை சாத்தியமாக்கிய ரிங்கு சிங் பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறார். சச்சின் டெண்டுல்கர், கங்குலி, ஷா ருக் கான் உள்ளிட்ட பலரும் பாராட்டி வரும் நிலையில், ரோகித் சர்மாவின் ட்வீட் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Shah rukh khan tweet

இங்கே ஐபிஎல் குறித்து பல்வேறு வெறுப்பு பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஐபிஎல் காரணமாகவே இந்திய அணி தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது. 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் ஆரம்பித்ததில் இருந்து டி20 போட்டிகளில் இந்திய அணியின் ஆதிக்கம் வெகுவாக குறைந்துவிட்டது. ஐபிஎல் என்பதே பணம் சம்பாரிக்கும் நோக்கில் நடத்தப்படுகிறது. இந்திய கிரிக்கேட்டுக்கு இதனால் ஒரு பயனும் இல்லை. ஐபிஎல் வந்தபின் 20 உலக கோப்பையையும் வெல்லவில்லை என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட வருகின்றன.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரோகித் சர்மாவின் ட்வீட் இருந்ததையும் பார்க்க முடிந்தது. அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது: “ஐபிஎல் என்பது திறமை இருக்கும் வீரருக்கு சரியான வாய்ப்புகளை கொடுத்து திறமையான வீரர்களை உலகிற்கு அடையாளப்படுத்தும் தொடராகும். அபாரமாக விளையாடிய ரிங்கு சிங்-க்கு எனது வாழ்த்துக்கள். இன்றைய நாள் உன்னுடையது அல்ல யாஷ் தயால். இதிலிருந்து கற்றுக்கொள்.” என்று பதிவிட்டிருந்தார்!