டி20 கிரிக்கெட்டுக்கு திரும்ப வரீங்களா?.. மறைமுகமாக ஸ்டோக்சை தாக்கிய ரோகித் சர்மா – பத்திரிக்கையாளர் சந்திப்பில் சுவாரசியம்

0
91
Rohit

நாளை பங்களாதேஷ் அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டி ஆரம்பிக்க இருக்கும் நிலையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஓய்வு குறித்து நகைச்சுவையான பதிலை கூறியிருக்கிறார்.

இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவின் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்களாதேஷ் அணி வெல்லும் என அவர்கள் தரப்பில் பேசி வருவது குறித்து கேட்கப்பட்ட பொழுது, கடைசியாக இங்கு வந்த இங்கிலாந்து அணியும் அப்படித்தான் பேசினார்கள் என்ன நடந்தது என்று தெரியும்தானே என்று நகைச்சுவையாக பதில் அளித்திருந்தார். மீண்டும் இங்கிலாந்து அணியை சேர்ந்த ஸ்டோக்ஸை மறைமுகமாக தாக்கும் விதமாக இன்னொரு பதிலையும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஸ்டோக்ஸ் எடுத்த உல்டா முடிவு

இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோர் கடந்த ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது என அறிவித்திருந்தார். இந்த நிலையில் திடீரென இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு ஓய்வை வாபஸ் வாங்கி கொண்டு வந்தார். அவர் வருகைக்காக ஹாரி புரூக் இடம் அப்போது தற்காலிகமாக பறிக்கப்பட்டது. இது பெரிய விமர்சனமாகவும் முன் வைக்கப்பட்டது.

பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு திரும்பி வந்தாலும் கூட அவரால் பெரிய அளவில் விளையாடி தன்னுடைய அணியை நாக் அவுட் சுற்றுக்கு கொண்டு செல்ல முடியவில்லை. ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு நடப்பு சாம்பியனாக வந்து அரையிறுதிக்கு தகுதி பெற முடியாமல் பரிதாபமாக இங்கிலாந்து வெளியேறியது.

- Advertisement -

சர்வதேச டி20 கிரிக்கெட்டுக்கு திரும்ப வரீங்களா?

இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு ஓய்வை ரத்து செய்துவிட்டு ரோகித் சர்மா வருவாரா? என்று கேட்கப்பட்டது. இதுகுறித்து பதில் அளித்த ரோகித் சர்மா “இந்த நாட்களில் கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவது என்பது நகைச்சுவையான ஒரு விஷயமாக மாறிவிட்டது. முதலில் ஓய்வு அறிவிக்கிறார்கள் பிறகு திரும்பவும் வந்து விளையாடுகிறார்கள். ஆனால் இந்தியாவில் இப்படி எதுவும் நடக்க ஆரம்பிக்கவில்லை. ஆனால் மற்ற நாட்டு வீரர்களை இதில் கவனித்துப் பார்க்கிறேன். இப்படித்தான் நடந்து கொள்கிறார்கள். இதனால் உண்மையில் யார் ஓய்வு பெற்று இருக்கிறார்கள்? என்றே தெரியவில்லை”

இதையும் படிங்க : ஐபிஎல் 2025.. மீண்டும் பயிற்சியாளர் பதவியில் ரிக்கி பாண்டிங்.. எந்த அணிக்கு தெரியுமா?.. புதிய தகவல்கள்

“என்னுடைய முடிவு இறுதியானது. நான் மீண்டும் சர்வதேச டி20 கிரிக்கெட் திரும்பி வர மாட்டேன். நான் விரும்பி விளையாடிய ஒரு கிரிக்கெட் வடிவத்தில் ஓய்வு பெற்று விட்டேன். நான் முதலில் 50 ஓவர் கிரிக்கெட்டில் விளையாடினேன். பிறகு நேரடியாக 2007 டி20 உலகக் lகோப்பை இந்திய அணிக்குள் வந்து கோப்பையையும் வென்றேன். பிறகு 2024 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்றேன். ஓய்வு பெறுவதற்கு இது சரியான நேரம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -