ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ரிக்கி பாண்டிங் விலகிய மூன்று மாதத்தில் மீண்டும் ஒரு புதிய அணிக்கு ஐபிஎல் தொடரில் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
ரிக்கி பாண்டிங் ஐபிஎல் தொடரில் 2008 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆரம்பித்து 2013 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி ஒட்டு மொத்த கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். பிறகு பல்வேறு பொறுப்புகளில் தொடர்ந்த அவர் இறுதியாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரின் மோசமான செயல்பாட்டு அணி
இந்த நிலையில் இதுவரை நடைபெற்றுள்ள 17 ஐபிஎல் சீசன்களில் இரண்டே முறை மற்றும் பிளே ஆப் சுற்றுகளுக்கு தகுதி பெற்ற மோசமான செயல்பாடு கொண்ட அணியாக பஞ்சாப் கிங்ஸ் இருக்கிறது. மேலும் கடைசி பத்து வருடங்களில் ஒரு முறை கூட ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. இந்த நிலையில் கேப்டனாக கடைசியாக இருந்த ஷிகர் தவானும் பொறுப்பில் தொடர முடியாத நிலையில் இருக்கிறார்.
இப்படியான நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் புதிய தலைமை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங்கை ஒப்பந்தம் செய்திருப்பதாக அறிவித்திருக்கிறது. கடந்த ஏழு சீசன்களில் அந்த அணியின் ஆறாவது தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிக்கி பாண்டிங் முக்கிய பணி
ரிக்கி பாண்டிங் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சி ஆளாக வருவதோடு மீதமுள்ள பயிற்சியாளர்களையும் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை பெற்று இருப்பவராக இருக்கிறார். மேற்கொண்டு இவரை ஒட்டுமொத்த பயிற்சியாளர் குழுவையும் தேர்ந்தெடுத்து உருவாக்குவார்.
இதையும் படிங்க : இன்னும் 217 ரன்.. சச்சினின் மகத்தான சாதனையை முறியடிக்க முஷ்பிகுர் ரஹீமுக்கு வாய்ப்பு.. இந்தியா பங்களாதேஷ் டெஸ்ட்
அத்துடன் ரிக்கி பாண்டிங் மெகா ஏலத்திற்கு முன்பாக எந்த வீரர்களை தக்க வைக்கலாம் என்று முடிவெடுக்க வேண்டியது முக்கியம். இதைத் தொடர்ந்து மெகா ஏலத்தில் புதிய அணியை உருவாக்க வேண்டும். எனவே இந்த முறை பஞ்சாப் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் சிறந்த முறையில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.