16 வருடம்.. விராட் கோலியின் அந்த விஷயங்களை சந்தையில் வாங்க முடியாது – ரோகித் சர்மா பாராட்டு

0
429
Rohit

விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்து 16 ஆண்டுகள் நிறைவடைகிறது. தற்பொழுது இதற்கு விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பேசிய வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது.

விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 2008 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமானார். அங்கிருந்து தொடர்ந்து அதிக போட்டிகளில் எங்கும் ஓய்வெடுக்காமல் 16 ஆண்டுகளாக இந்திய அணிக்கு மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் மிகச்சிறந்த வீரராக இருந்து வருகிறார்.

- Advertisement -

மேலும் விராட் கோலி உடல் பகுதியில் காட்டும் தீவிரம் உலகெங்கும் இருக்கும் இளைஞர்களுக்கு மிகப்பெரிய உந்துதலாக இருந்து வருகிறது. இந்திய கிரிக்கெட்டில் உடல் தகுதிக்கு மிகப்பெரிய முக்கியத்துவத்தை ஏற்படுத்திய முதல் கேப்டனாக விராட் கோலி இருக்கிறார்.

அவர் தன்னுடைய திறமையின் மூலமாக வெளி உலகத்திற்கு எந்த அளவுக்கு போய் சேர்ந்தாரோ, அதே அளவிற்கு உடல் தகுதிக்கு காட்டும் தீவிரத்தின் மூலமாகவும் உலகெங்கும் ரசிகர்களிடம் போய் சேர்ந்திருக்கிறார். மேலும் புதிய ரசிகர்களை கிரிக்கெட்டுக்கு கொண்டு வரக்கூடிய மிகப்பெரிய வீரராகவும் உருவெடுத்திருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு விராட் கோலி வந்து 16 ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்றில் ரோகித் சர்மா விராட் கோலி குறித்து மிகவும் பாராட்டி புகழ்ந்து பேசி இருக்கிறார்.

விராட் கோலி பற்றி ரோஹித் சர்மா பேசுகையில் “விளையாட்டில் இருக்கும் விராட் கோலியின் பசியும் ஆர்வமும் தீவிரமும் ஈடு செய்ய முடியாது என்பதை நாம் அனைவரும் அறிவோம். நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு முறையும் அவர் வித்தியாசமான ஆற்றலுடன் வருகிறார். அவர் அட்டவணையில் மிகப்பெரிய அனுபவத்தை கொண்டு வருகிறார். இந்திய அணிக்காக அவர் நிறைய போட்டிகளை விளையாடியிருக்கிறார்.

இதையும் படிங்க : 150 ஆண்டுகள்.. ஆஸி இங்கிலாந்து விளையாடும் ஒரே ஒரு ஸ்பெஷல் டெஸ்ட்.. சிறப்பு காரணம் என்ன?

நீங்கள் சந்தையில் சென்று இப்படியான விளையாட்டுகளை எல்லாம் வாங்கி விட முடியாது. இது தொடர்ந்து போராட்டங்கள் மூலமாகவும், கடினமான சூழ்நிலைகளில் தொடர்ந்து இருப்பதன் மூலமாகவும் நிகழ்கிறது. விராட் கோலி ஒவ்வொரு முறையும் வேறு லெவலான ஆட்டத்தை கொண்டு வந்து கொண்டிருக்கிறார். அவருடைய ஆற்றல் அளவிட முடியாத ஒன்று” எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -