150 ஆண்டுகள்.. ஆஸி இங்கிலாந்து விளையாடும் ஒரே ஒரு ஸ்பெஷல் டெஸ்ட்.. சிறப்பு காரணம் என்ன?

0
47
Australia

கிரிக்கெட்டின் முதல் வடிவமாக டெஸ்ட் கிரிக்கெட் இருந்து வருகிறது. இந்த நிலையில் 2027 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஒரே ஒரு சிறப்பு டெஸ்ட் போட்டியில் மெல்போன் கிரிக்கெட் மைதானத்தில் விளையாட இருக்கின்றன.இதற்கான காரணம் என்னவென்று பார்க்கலாம்.

முதன்முறையாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 1877 ஆம் ஆண்டு மோதிக்கொண்டன. இந்த இரண்டு அணிகளும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய தற்போது 147 ஆண்டுகள் ஆகிறது.

- Advertisement -

இந்த நிலையில் 2027 ஆம் ஆண்டு இந்த இரண்டு அணிகளும் தங்களது முதல் டெஸ்டில் விளையாடிய 150ஆவது ஆண்டை கொண்டாட இருக்கின்றன. இத நினைவாக மெல்போன் மைதானத்தில் 2027 ஆம் ஆண்டு இந்த இரண்டு அணிகளும்ஒரே ஒரு சிறப்பு டெஸ்ட் போட்டியில் விளையாடுகின்றன.

இந்த இரண்டு அணிகளும் முதல் முதலில் மெல்போன் கிரிக்கெட் மைதானத்தில் 1877 ஆம் ஆண்டு விளையாடின. இதன் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் 1977 ஆம் ஆண்டு இதே மைதானத்தில் மோதிக்கொண்டன. அந்தப் போட்டியில் கிரேக் சேப்பல் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

தற்போது 150 ஆவது ஆண்டை கொண்டாட அதே மைதானமான மெல்போன் மைதானத்தில் இரண்டு அணிகளும் 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மோதிக்கொள்ள இருக்கின்றன. இந்த ஒரே ஒரு டெஸ்ட் போட்டி ஆசஸ் தொடரின் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க : 32 பந்து 35 ரன்.. ஸ்பின்னில் தடுமாறிய ரிஷப் பண்ட்.. கடைசியில் பந்து வீசிய ஆச்சரியம்.. டெல்லி பிரிமியர் லீக் 2024

இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் தலைமை நிர்வாக அதிகாரி நிக் ஹாக்லி கூறும்பொழுது “மார்ச் 2027ஆம் ஆண்டு மெல்போன் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் 150வது டெஸ்ட் போட்டியானது, உலகின் சிறந்த விளையாட்டு அரங்குகளில் ஒன்றான விளையாட்டின் உச்சகட்ட வடிவமைப்பின் கொண்டாட்டமாக இருக்கும். இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த போட்டியை நடத்த எங்களால் இப்பொழுதே காத்திருக்க முடியவில்லை” என்று கூறி இருக்கிறார்

- Advertisement -