“ரோகித் கோலி பத்தி இந்த விஷயத்துல தப்பா பரப்பி இருக்காங்க!” – ராபின் உத்தப்பா அதிரடி ஸ்டேட்மென்ட்!

0
137
Virat

இன்று நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் முதல்முறையாக மைதானம் நிரம்ப இருக்கிறது. இந்த உலகக் கோப்பை தொடரின் முதல் முக்கியமான போட்டி இன்று நடைபெறுகிறது!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி மதியம் துவங்குகிறது. இந்த போட்டி இரு அணிகளுக்கும் நடப்பு உலகக் கோப்பையின் பயணத்தில் முதல் போட்டியாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணி அதிகப்படியான ஆல்ரவுண்டர்களை கொண்டு இருக்கின்ற காரணத்தினால் மிகவும் பலமான அணியாக இருக்கிறது. இதன் காரணமாக அவர்களுடைய பேட்டிங் வரிசை மிக நீளமானதாக இங்கிலாந்து விட பலமாக அமைகிறது.

இந்திய அணி சரியான பேட்ஸ்மேன்கள் சரியான பந்துவீச்சாளர்கள் என அந்தந்த துறைக்கு சரியான வீரர்களைக் கொண்டு நிரப்பப்பட்ட அணியாக இருக்கிறது. மேலும் எல்லா வீரர்களும் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள்.

இதன் காரணமாக தற்போது இரண்டு அணிகளும் மோதிக் கொள்ளும் இந்த போட்டிக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருக்கிறது. மேலும் இன்று சென்னையில் மழை வாய்ப்பு மிக குறைவு என்கின்ற காரணத்தினால் ரசிகர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த போட்டி குறித்து பேசி உள்ள ராபின் உத்தப்பா ” ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக பெரிய வெற்றி பெறவில்லை என்பது உண்மை கிடையாது. நான் அதை நம்பவில்லை. எனவே ஸ்டார்க்குக்கு எதிராக இவர்கள் இருவரும் விளையாடும் விதம் சுவாரசியமான ஒன்றாக இருக்கும். நான் இதை பார்க்க ஆவலாக இருக்கிறேன்.

கில் விளையாடவில்லை என்றால் இஷான் ஓபனிங் செய்வார். சமீபகாலமாக கேஎல் ராகுல் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். எனவே அவரது இடத்தை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. அவர் நான்காம் இடத்திலேயே தொடர்ந்து பேட்டிங் செய்யலாம்.

ஆஸ்திரேலியா மிகவும் செட்டான அணியாக இருக்கிறது. அவர்கள் அணியில் ஹெட் மட்டும் இல்லாமல் இருக்கிறார். மற்ற அனைவரும் சிறப்பான பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார்கள். நிறைய ஆல்ரவுண்டர்கள் இருப்பது அவர்களுக்கு பலமாக மாறுகிறது!” என்று கூறியிருக்கிறார்!