வீடியோ: கோப்பையை வாங்குவதற்கு கெத்தாக காரில் வந்த ரோகித் சர்மா படை; மைதானத்தில் நடந்த லூட்டி!!

0
147

டி20 தொடரை வென்ற பிறகு, மைதானத்திற்குள் கெத்தாக காரில் வந்த ரோகித் சர்மா மற்றும் குழுவினரின் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகிய மிகவும் வைரல் ஆகியுள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆகஸ்ட் 7ஆம் தேதி நடந்து முடிந்த ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 188 ரன்கள் அடித்திருந்தது. இப்போட்டியில் காயத்தில் இருந்து சமீபத்தில் மீண்டு வந்த ரோகித் சர்மாவிற்கு கூடுதல் ஓய்வு அளிக்கப்பட்டு, ஹர்திக் பாண்டியா கேப்டன் பொறுப்பை ஏற்று விளையாடினர்.

- Advertisement -

இதனை அடுத்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 100 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 5-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. மிகச்சிறப்பாக பந்துவீசிய அக்ஸர் பட்டேல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகனாக இளம்வீரர் அர்ஷிதீப் சிங் தேர்வு செய்யப்பட்டார். ரோகித் சர்மா இந்திய அணிக்கு முழுநேர கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட பிறகு ஒரு தொடரைக் கூட இழந்ததில்லை.

ஐந்தாவது டி20 போட்டியில் ரோகித் சர்மா இடம்பெறவில்லை என்றாலும், கோப்பையை ஒப்படைக்கும் விழாவில் பங்கேற்கும் பொழுது அவர் மைதானத்திற்குள் வந்த விதம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அவர் மட்டுமல்லாது அவருடன் சஞ்சு சாம்சன், ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக் ஆகியோரும் வந்தனர். இவர்கள் அனைவரும் மைதானத்திற்கு உள்ளே பயன்படுத்தப்படும் சிறு அளவிலான காரை எடுத்துக் கொண்டு சிறிது நேரம் வலம் வந்தனர். பின்னர் அதை ஓரமாக நிறுத்திவிட்டு கோப்பையை பெற்று சென்றனர்.

இந்த சம்பவத்தின் வீடியோ பதிவு தற்போது இணையதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது மட்டுமல்லாமல் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

- Advertisement -

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் முடிவுற்றதை அடுத்து, இந்திய வீரர்கள் நாடு திரும்புகின்றனர். இன்னும் ஓரிரு வாரங்களில் ஆசியக் கோப்பை தொடர் துவங்க இருப்பதால் சில நாட்கள் ஓய்வு முடிந்த பிறகு மீண்டும் பயிற்சிக்கும் திரும்ப இருக்கின்றனர். இந்த வருடம் ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.