“ரிங்கு சிங்-யுவராஜ் சிங்.. நான் சொல்லல.. இவங்க சொல்றாங்க!” – கவாஸ்கர் அதிரடி பேச்சு!

0
382
Rinku

இந்திய அணி தற்பொழுது சூரியகுமார் யாதவ் தலைமையில் தென் ஆப்பிரிக்க மண்ணில் அந்த அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. நேற்று மழையின் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் முதல் டி20 போட்டி ரத்து செய்யப்பட்டது.

பேட்ஸ்மேன்களுக்கு கொஞ்சம் கடினமான ஆடுகளத்தை கொண்ட மேலும் புதிய சூழ்நிலையில் இந்திய இளம் பேட்ஸ்மேன்கள் எவ்வாறு செயல்படுவார்கள்? என பார்ப்பதற்கு ரசிகர்கள் வரை மிகப்பெரிய அளவில் காத்திருந்தார்கள். ஆனால் நேற்றைய மழை மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.

- Advertisement -

இது மட்டும் இல்லாமல் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வாலுடன் ருத்ராஜ் இல்லை கில் இருவரில் யார் வருவார்கள்? ஸ்ரேயா ஐயரா இல்லை திலக் வர்மாவா? என்கின்ற கேள்விகள் இருந்தது. நேற்று அதற்கும் பதில் காண முடியவில்லை.

குறிப்பாக ஆறாவது இடத்தில் பேட்டிங் செய்ய வரும் ரிங்கு சிங் பேட்டிங்கை காண ரசிகர்கள் ஆவலுடன் இருந்தார்கள். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து அவருக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த போட்டிக்கு முன்பாக பேசியிருந்த அவர் தென் ஆப்பிரிக்காவில் வேகம் மற்றும் பவுன்ஸ் கொண்ட ஆடுகளங்களில் எப்படி விளையாடுவது என, தான் பயிற்சி செய்து தயாராகி இருப்பதாக கூறியிருந்தார். ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில்தான் மழை எல்லாவற்றையும் கெடுத்து இருக்கிறது.

- Advertisement -

ரிங்கு சிங் குறித்து சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “திறமை என்பது அனைவருக்கும் கொடுக்கப்பட்டது கிடையாது. நீங்கள் நாள் முழுவதும் விளையாடலாம். ஆனால் ஒரு நாள் உங்களுக்கு திறமை இல்லை என்று நீங்கள் புரிந்து கொள்வீர்கள். ஆனால் ரிங்கு சிங்குக்கு தன்னால் முடியும் என்கின்ற நம்பிக்கை இருக்கிறது. அவர் அதைச் செய்கிறார். கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக அவர் ஐபிஎல் தொடரில் உள்ளே வெளியே என இருந்தார். ஆனால் ஒரு வாய்ப்பு கிடைத்ததும் தான் யார் என்று காட்டினார்.

இப்போது அவர் இந்திய அணியின் ஒரு அங்கமாக இருக்கிறார். இப்போது அவர் மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. மக்கள் அவரை இப்பொழுது அடுத்த யுவராஜ் சிங்காக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ரிங்கு சிங் யுவராஜ் சிங் பொருத்தமாக இருக்கிறது. இந்திய கிரிக்கெட்டுக்காக யுவராஜ் சிங் சிறப்பாகச் செயல்பட்டது போல இவரும் செயல்படுவார்!” என்று கூறியிருக்கிறார்!