இந்திய டெஸ்ட் 15பேர் அணியில் இல்லாத ரிங்கு சிங்.. பீல்டிங் செய்ய முடிந்தது எப்படி?

0
2339
Rinku

இந்திய அணியின் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில், தற்பொழுது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கேஎல்.ராகுல் சதத்துடன் 245 ரன்கள் எடுத்தது. கேஎல்.ராகுல் இந்த போட்டியில் விக்கெட் கீப்பராக களம் இறங்கி இந்திய அணிக்கு சதம் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதற்கு அடுத்து இன்று இரண்டாவது நாள் பேட்டிங் செய்ய ஆரம்பித்த தென் ஆப்பிரிக்க அணிக்கு, அந்த அணியின் முன்னாள் கேப்டன் டீன் எல்கர் ஆட்டம் இழக்காமல் 140 ரன்கள் எடுத்து, 11 ரன்கள் முன்னிலைப் பெற உதவியிருக்கிறார்.

தற்பொழுது தென் ஆப்பிரிக்க அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்திருக்கிறது. நாளைய போட்டியில் இந்திய அணி அடுத்த 30, 40 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்காவை ஆட்டம் இழக்க செய்ய வேண்டும், இல்லை தென் ஆப்பிரிக்கா 70 ரன்கள் லீடிங் எடுத்தால், இந்திய அணிக்கு இந்த போட்டியை வெல்வது பெரிய கஷ்டம் ஆகிவிடும்.

இந்த நிலையில் இன்றைய போட்டியில் மாற்று வீரராக வந்து ரிங்கு சிங் பீல்டிங் செய்தார். இதில் ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், அவர் இந்த டெஸ்ட் தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய மொத்த அணியில் இல்லாத வீரர்.

- Advertisement -

ரிங்கு சிங் முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் மட்டுமே இந்திய அணியில் இடம் பெற்றார். டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் பெறவில்லை. ஆனாலும் மாற்று வீரராக பீல்டிங் செய்ய வந்தார்.

இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று இருந்த ருத்ராஜ் காயத்தின் காரணமாக வெளியேற, அந்த இடத்திற்கு வந்த அபிமன்யு ஈஸ்வரன், தற்பொழுது தென் ஆப்பிரிக்காவில், தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கு எதிராக இந்திய ஏ அணிமோதும் நான்கு நாட்கள் கொண்ட போட்டிக்கு அனுப்பப்பட்டு இருக்கிறார்.

எனவே இந்திய கிரிக்கெட் நிர்வாகம் ரிங்கு சிங்கை தற்பொழுது அவருடைய இடத்திற்கு கொண்டு வந்து, அவரை மாற்று வீரராக களம் இறக்கி பீல்டிங் செய்ய வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.