சுப்மன் கில்? கேஎல் ராகுல்? யாருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுக்கவேண்டும்? – குழப்பத்தில் இருக்கும் ரோகித் சர்மாவுக்கு ரிக்கி பாண்டிங் ஆலோசனை!

0
1005

சுப்மன் கில் அல்லது அல்லது கேஎல் ராகுல் இருவரில் யாருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுக்கவேண்டும் எனும் குழப்பத்திற்கு சிறந்த ஆலோசனையை கூறியுள்ளார் ரிக்கி பாண்டிங்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு நிலவிவரும் ஒரே குழப்பம் என்னவென்றால், கே.எல் ராகுல் அல்லது சுப்மன் கில் இருவரில் யாருக்கு பிளேயிங் லெவலில் வாய்ப்பு கொடுத்து ஓபனிங் இறங்க வைக்க வேண்டும் என்பதுதான்.

- Advertisement -

கேஎல் ராகுல் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இடம்பெற்று ஓபனிங் செய்தார். மூன்று இன்னிங்ஸ்களில் விளையாடி வெறும் 38 ரன்கள் மட்டுமே அடித்தார். இதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில்லுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுக்கப்பட்டு, கேஎல் ராகுல் வெளியில் அமர்த்தபட்டார்.

சுப்மன் கில், கிடைத்த இந்த வாய்ப்பை எதிர்பார்த்த வகையில் பயன்படுத்தவில்லை. முதல் இன்னிங்ஸ் 21 ரன்கள், இரண்டாவது இன்னிங்ஸில் 5 ரன்கள் என ஆட்டம் இழந்தார். ஒட்டுமொத்த அணியே தடுமாறினாலும், சுப்மன் கில்லுக்கு கிடைக்காத வாய்ப்பு கிடைத்ததால் அவர் மீது எதிர்பார்ப்பிற்கு ரன்கள் அடிக்கவில்லை என விமர்சனங்கள் எழுந்தது.

இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியில் யாருக்கு ஓபனிங் வாய்ப்பு கொடுக்க வேண்டும்? இருவரில் யார் பிளேயிங் லெவனில் இருக்க வேண்டும் என்கிற விவாதங்கள் நிலவி வருகிறது? இதற்கு மிகச்சிறந்த அறிவுரையை கூறியுள்ளார் ஆஸ்திரேலியா அணியின் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங். அவர் பேசியதாவது:

- Advertisement -

“கே.எல். ராகுல் இங்கிலாந்து மைதானங்களில் முந்தைய காலங்களில் நன்றாக செயல்பட்டிருக்கிறார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரவுள்ளது. அதனை கருத்தில்கொண்டு ரோஹித் சர்மா செயல்படவேண்டும். இங்கிலாந்து கண்டிஷங்களில் கேஎல் ராகுல் கவனிக்கப்படக்கூடிய வீரராக இருப்பார்.

அதேநேரம் சுப்மன் கில் திறமையான வீரர். அவரது ஃபார்மை மதித்து பிளேயிங் லெவனில் வைத்திருக்க வேண்டும். நேர்த்தியாகவும் பொறுப்புடனும் ஆட்டத்தை அணுகுகிறார். ஆகையால், என்னை பொறுத்தவரை, இரண்டு பேரும் பிளேயிங் லெவனில் இருக்க வேண்டும். கில் ஓபனிங் செய்தால், கே.எல். ராகுல் மிடில் ஆர்டரில் களமிறங்க வேண்டும்.

இங்கிலாந்து மைதானங்களில் பந்து நீண்ட நேரம் ஸ்விங் ஆகும். துவக்கத்தில் இருந்தே ஸ்விங்கை பார்க்கலாம். அப்படியிருக்க, கேஎல் ராகுல் அணுகுமுறை நன்றாக எடுபடும் என நினைக்கிறேன். ஆகையால் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக கேஎல் ராகுலை விளையாடவைக்கலாம். சிறந்ததாக கருதுகிறேன்.” என்றார்.