இம்பேக்ட் பிளேயரோட 12 பேர் வேணாமா?.. ஆனா எனக்கு 13 பேர் ஆடனும்.. காரணம் இதுதான் – அஸ்வின் விருப்பம்

0
11
Ashwin

அடுத்த ஆண்டு 2025 ஐபிஎல் தொடர் மெகா ஏலத்துடன் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதி இருக்க வேண்டுமா? என்பது குறித்து நிறைய விவாதங்கள் வெளியில் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இது குறித்து இந்திய அணியின் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆசிரியப்படுத்தும் பதில் ஒன்றை கூறி இருக்கிறார்.

இம்பேக்ட் பிளேயர் விதியை கொண்டு வந்த காரணத்தினால் இரண்டு பிளேயிங் லெவன் விதியையும் பிசிசிஐ ஐபிஎல் தொடரில் கொண்டு வந்தது. இதன் மூலமாக ஐபிஎல் தொடரின் போட்டித் தன்மையை அதிகரித்து, தரத்தை மேம்படுத்த வேண்டும் என பிசிசிஐ விரும்பியது. மேலும் பனிப்பொழிவு போட்டியின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதை தவிர்க்கவும் இரண்டு பிளேயிங் லெவன் விதி உதவியிருக்கிறது.

- Advertisement -

அதேசமயத்தில் 12 வீரர்கள் கொண்டு விளையாடுகின்ற காரணத்தினால் ஆல் ரவுண்டர்கள் தேவை குறைந்துவிட்டது. எனவே இந்திய கிரிக்கெட்டில் உருவாக்கக்கூடிய புதிய வீரர்கள் ஆல் ரவுண்டர்களாக உருவாக்க விரும்ப மாட்டார்கள். ஏற்கனவே இருக்கும் ஆல் ரவுண்டர்களுக்கும் மதிப்பு இருக்காது என அஞ்சப்படுகிறது. அத்தோடு உண்மையான கிரிக்கெட்டை அளித்து விடும் என்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

மேலும் ஐபிஎல் அணிகளில் டெல்லி அணி நிர்வாகம் அடுத்து வருகின்ற ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதி வேண்டாம் என வெளிப்படையாகவே கூறியிருக்கிறது. இதனால் போட்டியின் சுவாரசியம் பாதிக்கப்படுவதாக டெல்லி அணியின் நிர்வாகம் கருதுகிறது.

- Advertisement -

இப்படியான நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயர் விதி வேண்டுமா என்பது குறித்து பேசி இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “கிரிக்கெட் மட்டுமே புதுப்புது மாற்றங்களை ஏற்றுக் கொள்ளக் கூடிய விளையாட்டாக இருந்து வருகிறது. இங்கிலாந்தின் நூறு பந்து தொடர் மற்றும் டி20 லீக் போன்றவைகளை கிரிக்கெட்டாக நினைக்கக் கூடாது. இவை கிரிக்கெட் போல இருக்கும் வேறு வகையான விளையாட்டு.

மேலும் ரசிகர்களுக்கு ஒரே மாதிரி கொடுத்துக் கொண்டிருந்தால் சலிப்பாகிவிடும். எனவே அவர்களுக்கு விளையாட்டில் ஏதாவது புதுமையான விதிகளை கொண்டு வந்து புதுமையான விளையாட்டை தர வேண்டும். ரசிகர்கள் இல்லையென்றால் கிரிக்கெட் கிடையாது. எனவே அவர்களை மகிழ்ச்சி படுத்துவது முக்கியம்.

இதையும் படிங்க : உறுதியா சொல்றேன்.. ரோகித் சர்மாவுடன் மினி உலக கோப்பையில் ஓபனிங் பண்ண போறது இவர்தான் – தினேஷ் கார்த்திக் கணிப்பு

இங்கு இம்பேக்ட் பிளேயர் உடன் 12 வீரர்கள் விளையாடுவது பிரச்சனை என்கிறார்கள். இந்த விஷயத்தில் நான் என்ன சொல்கிறேன் என்றால் பேட்டிங் செய்யும்பொழுது ஒரு இம்பேக்ட் பிளேயரும், பவுலிங் செய்யும் பொழுது ஒரு இம்பாக்ட் பிளேயரும் என இரண்டு இம்பேக்ட் பிளேயர்கள் கொடுத்தால் பிரச்சனை தீர்ந்து விடும். இதன் மூலமாக போட்டித் தன்மை இன்னும் அதிகரிக்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -