6, 6, 4, 6, 4.. 36 வயது பவுலர் 14 வயது சிறுவனிடம் சரண்.. ஐபிஎல்லில் புதிய வரலாறு படைத்த வைபவ் சூரியவன்சி.. ஐபிஎல் 2025

0
496

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 47வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர் வைபவ் சூரியவன்சி ஐபிஎல் கிரிக்கெட்டில் புதிய வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறார்.

- Advertisement -

ராஜஸ்தான் குஜராத் மோதல்

ராஜஸ்தானில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் குவித்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் 30 பந்துகளில் 39 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்து வெளியேறினார். அவரோடு களம் இறங்கிய மற்றொரு துவக்க வீரர் கேப்டன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 பந்துகளில் 84 ரன்கள் குவிக்க, மூன்றாவது வரிசை பேட்ஸ்மேன் ஜாஸ் பட்லர் 26 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார்.

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி களம் இறங்கியது. இதில் அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் வைபவ் சூரியவன்சி ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் ஓவரில் சிராஜின் மூன்றாவது பந்தில் சிக்ஸர் உடன் ஆட்டத்தை துவங்கிய வைபவ் அதற்குப் பிறகு தனது அதிரடியை நிறுத்தவில்லை. இதில் குறிப்பாக நான்காவது ஓவரின் முதல் பந்தை 36 வயது அனுபவ வீரர் இஷாந்த் சர்மா வீச வந்தார்.

- Advertisement -

வரலாற்று சாதனை நிகழ்த்திய வைபவ்

முதல் இரண்டு பந்துகளில் சிக்சர் அடித்து அதிரடியை வெளிப்படுத்திய வைபவ், மூன்றாவது பந்தில் பவுண்டரி மற்றும் 5வது பந்தில் சிக்சர் அடித்தார். அதற்குப் பிறகு திரும்பவும் 6வது பந்தில் பவுண்டரி அடிக்க, மொத்தமாக அந்த ஓவரில் மட்டும் 28 ரன்கள் வந்தது. அதற்குப் பிறகு வாஷிங்டன் சுந்தர் ஓவரில் 5வது பந்தில் சிக்சர் மற்றும் 6வது பந்தில் பவுண்டரி என அடித்து இந்த ஐபிஎல் தொடரில் 17 பந்துகளில் அதிவேக அரை சதம் அடித்த முதல் வீரர் என்கிற சாதனையை படைத்தார்.

இதையும் படிங்க:27 கோடி அழுத்தம்.. ரிஷப் பண்டின் கிரிக்கெட் வாழ்க்கையை கெடுக்கிறதா.? உண்மையை உடைத்துப் பேசிய ஆலோசகர் ஜாகிர் கான்

அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் மிகக் குறைந்த வயதில் அரை சதம் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் நிகழ்த்தி இருக்கிறார். இவரது அதிரடி ஆட்டத்தை கண்ட ரசிகர்கள் கொண்டாட்டமான நிலையில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது வெற்றி இலக்கை நோக்கி விளையாடி வரும் ராஜஸ்தான் அணி 8 ஓவர் முடிவில் 102 ரன்கள் குவித்து அதிரடியாக விளையாடி வருகிறது. இதில் வைபவ் 24 பந்துகளில் 53 ரன்கள் குவித்து விளையாடி வருகிறார்.

- Advertisement -