நேற்று நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் லக்னோ அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
லக்னோ அணி ஐந்தாவது தோல்வியை தழுவி இருக்கும் நிலையில் அதன் கேப்டன் ரிஷப் பண்ட் மீதான அழுத்தம் குறித்து ஆலோசகர் ஜாகிர் கான் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
27 கோடி அழுத்தம்
நடப்பு ஐபிஎல் தொடரில் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடி வெற்றிகளை குவித்து வந்த லக்னோ அணி அதற்குப் பிறகு தோல்வி பாதையில் தொடர்ந்து பயணித்து வருகிறது. இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் அந்த அணி 5 போட்டிகளில் வெற்றி மற்றும் 5 போட்டிகளில் தோல்வி என புள்ளிகள் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கும் நிலையில் இனி விளையாடும் நான்கு போட்டிகளில் மூன்றில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். இதில் கேப்டன் ரிஷப் பண்டின் பேட்டிங் மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.
சென்னை அணிக்கு எதிரான ஒரே ஒரு போட்டியில் மட்டுமே அரை சதம் அடித்த அவர் அதற்கு பிறகு தொடர்ந்து மோசமான முறையில் பேட்டிங்கில் சொதப்பி வருகிறார். 27 கோடி ரூபாய்க்கு அவரை லக்னோ அணி வாங்கிய நிலையில் அதிக விலை அவருக்கு அதிக அளவிலான அழுத்தத்தை கொடுக்கிறதா? என அணியின் ஆலோசகர் ஜாகிர் கானிடம் கேட்கப்பட்டதற்கு அவர் சில முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார்.
விரைவில் மீண்டு வருவார்
இதுகுறித்து ஜாகிர் கான் பேசும்போது “நான் அந்த 27 கோடி ரூபாய் விலையை எதனுடனும் தொடர்பு படுத்தி பேச மாட்டேன். அவர் ஒரு அணியின் தலைவர். அவர் ஒரு அற்புதமான தலைவராக இருக்கிறார். அதை நான் உறுதியாகச் சொல்ல முடியும். எங்கள் அணியில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் வசதியாக இருக்கவும், கேட்கப்படும் முடிவுகளுக்கு தகுந்தவாறு மாற்றங்களை செய்யவும் ஐபிஎல்லில் நடக்கும் திட்டமிடல் ஆகியவை தெளிவாக இருக்கின்றன.
இதையும் படிங்க:விராட் கோலி கிடையாது.. ஆர்சிபி அணியின் உண்மையான ஹீரோ அவங்க தான்.. 4 வெற்றி சாத்தியமே இல்ல – சஞ்சய் மஞ்சுரேக்கர் விளக்கம்
ஒரு தலைவராக அவர் எல்லா பணிகளையும் சரியாக செய்து வருகிறார். ஒரு பேட்ஸ்மேன் ஆக மிடில் வரிசை ரிஷப் பண்ட்டை சார்ந்து இருக்கிறது. அவரிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் தாக்கம் மிக விரைவாக வரும் என்கிற நம்பிக்கையோடு நான் இருக்கிறேன். இது ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றி பேசக் கூடியதாகும். நான் இதனை அழுத்தத்தோடு தொடர்பு படுத்த மாட்டேன். ஏனென்றால் அவர் எப்படிப்பட்ட ஆளுமை மிக்க ஒரு தலைவர் என்று நன்றாகவே தெரியும். எனவே நடத்ததை கடந்து இனி வரப்போகிற ஆட்டங்களில் கவனம் செலுத்துவது மட்டுமே எங்களது குறிக்கோளாகும்” என்று பேசி இருக்கிறார்.