15.5 ஓவரில் 212 ரன்.. குஜராத் அணியின் பவுலிங்கை வெளுத்து வாங்கி 14 வயது சிறுவன் சாதனை சதம்.. 8 விக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி

0
158

ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழாவில் 47-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி விளையாடின.

இதில் மிகச்சிறப்பாக விளையாடிய ராஜஸ்தான் அணி 14 வயது வீரரின் சிறப்பான சதத்தால் 15.5 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை அடைந்தது.

- Advertisement -

குஜராத் ராஜஸ்தான் மோதல்

ராஜஸ்தானில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் ராஜஸ்தான் அணி பந்து வீச களம் இறங்க, குஜராத் அணி பேட்டிங் விளையாடியது. இதில் அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் சாய் சுதர்சன் மற்றும் சுப்மான் கில் ஆகியோர் சிறப்பான துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் குவித்த நிலையில், சாய் சுதர்சன் 39 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதற்குப் பிறகு அணியின் கேப்டன் கில் 50 பந்துகளில் 5 போர் மற்றும் நான்கு சிக்ஸ் என 84 ரன்கள் குவித்து வெளியேறினார்.

அவருக்குப் பிறகு இறுதியில் ஜாஸ் பட்லர் 26 பந்துகளை எதிர்கொண்டு 50 ரன்கள் குவிக்க, குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் குவித்தது. அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களம் இறங்கியது. கடினமான இலக்கை நோக்கி துவக்க வீரர்களாக வைபவ் சூரியவன்சி மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் களம் இறங்கினார்கள்.

- Advertisement -

ராஜஸ்தான் எளிதான வெற்றி

தனது முதல் பந்தில் இருந்தே அதிரடியை துவக்கிய 14 வயது வீரர் வைபவ், 17 பந்துகளில் அதிவேக அரை சதத்தை அடித்தார். அவருக்கு மற்றொரு துவக்க வீரர் ஜெய் ஸ்வால் நன்கு ஒத்துழைப்பு தந்து விளையாட வெறும் 35 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிவேக சதம் அடித்த வீரர் என்ற மெகா சாதனையை படைத்தார். இதற்கு முன்பாக கிறிஸ் கெயில் 30 பந்துகளில் சதம் அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:100 ரன் 11 சிக்ஸ்.. உலகமே எழுந்து நின்று கைதட்ட.. ஐபிஎல் வரலாற்றில் அபார சாதனை படைத்த வெறும் 14 வயது சிறுவன்.. RR vs GT

வெறும் 38 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு நிலையில் 7 பவுண்டரி மற்றும் 11 சிக்சர் என 101 ரன்கள் குவித்து பிரசித் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். மற்றொரு துவக்க வீரர் ஜெய்ஸ்வால் 40 பந்துகளில் 70 ரன்கள் குவித்து வெளியேற, இறுதிக்கட்டத்தில் அணியின் கேப்டன் ரியான் பராக் 15 பந்துகளில் 32 ரன்கள் குவித்து ராஜஸ்தான் அணியை வெற்றி பெற வைத்தார். இறுதியில் ராஜஸ்தான் அணி 15.5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்து சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. தனது மூன்றாவது வெற்றியை ராஜஸ்தான் பெற்றிருக்கும் நிலையில் இன்னும் பிளே ஆப் சுற்றில் நீடிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -