2011ல் தந்தை.. 2023ல் மகன்! டெஸ்ட் கிரிக்கெட்டில் தந்தை-மகன் இருவரின் விக்கெட்டையும் எடுத்த அஸ்வின் புதிய சாதனை!

0
2214

2011ஆம் ஆண்டு தந்தை ஷிவ்நரைன் சந்தர்பால் விக்கெட்டை எடுத்த அஸ்வின், வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்டில் மகன் டாக்நரைன் சந்தர்பால் விக்கெட்டை எடுத்தார். இதன் மூலம் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் முடிவடைந்த பிறகு வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதற்கட்டமாக விளையாடுகிறது.

- Advertisement -

டாமினிக்காவில் உள்ள மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்றது. முதலில் பேட்டிங் செய்வதாகவும் அறிவித்தது. துவக்க வீரர்களாக கேப்டன் கிரேக் ப்ராத்வெயிட் மற்றும் டாக்நரைன் சந்தர்பால் இருவரும் களமிறங்கினர்.

முதற்கட்டமாக வேகப்பந்துவீச்சாளர்கள் சிராஜ் மற்றும் உணட்கட் இருவரும் அட்டாக் செய்தனர். இருவரையும் நிதானமாக கட்டுக்கோப்புடன் ஆடி கிரிக்கெட் இழக்காமல் துவக்க ஜோடி பார்த்துக் கொண்டது.

இதனையடுத்து ரவிச்சந்திரன் அஸ்வின் அட்டாக் செய்வதற்கு வந்தார். இவரின் சுழற்பந்துவீச்சை தட்டுதடுமாறி விளையாடி வந்த துவக்க ஜோடி, முதலில் விக்கெட் இழக்காமல் விளையாடியது. இரண்டாவது ஓவரில் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது நேர்த்தியான பந்துவீச்சின் மூலம் துவக்க வீரர் டாக்நரைன் சந்தர்பால் விக்கெட்டை போல்ட் செய்து எடுத்தார். இவரது விக்கெட்டை தூக்கி அதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறும் படைத்திருக்கிறார்.

- Advertisement -

2011 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் வந்திருந்த போது நட்சத்திர வீரர் சிவ்நரைன் சந்தர்பால் விக்கெட்டை ரவிச்சந்திரன் அஸ்வின் தூக்கினார். இப்போது சுற்றுப்பயணம் வந்திருக்கும்போது அவரது மகன் டாக்நரைன் சந்தர்பால் பிளேயிங் லெவனில் விளையாடி வருகிறார். அவரது விக்கெட்டை அஸ்வின் எடுத்திருக்கிறார்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தந்தை மற்றும் மகன் இருவரின் விக்கெட்டையும் எடுத்த முதல் இந்திய வீரர் என்கிற சாதனையை படைத்துள்ளார்.