“பேட்டிங்கில் புஜாரா ரோகித் சர்மா மட்டும்தான்; மற்றவர்கள் மேல் நம்பிக்கை இல்லை” – சஞ்சய் மஞ்ச்ரேக்கர் மீண்டும் சர்ச்சை பேச்சு!

0
379
Manjrekar

இந்திய அணி நாளை மறுநாள் இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள இருக்கிறது!

இந்தப் போட்டிக்கு விபத்தில் சிக்கி குணமடைந்து வரும் ரிஷப் பண்ட் மற்றும் காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கிற ஜஸ்ட்ப்ரீத் பும்ரா இருவரும் அணியில் இடம் பெறாதது பின்னடைவாக இருக்கிறது.

- Advertisement -

மேலும் கடந்த முறை இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் துவக்க வீரராக கே.எல் ராகுல் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு இருந்தார். இவர் விக்கெட் கீப்பராகவும் செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த முறை ரிஷப் பண்ட் இல்லாத நிலையில் கே எல் ராகுல் அணியில் இருந்தால், விக்கெட் கீப்பராக ரிஷப் பன்ட் இடத்தில் அவர் விளையாடுவது இந்திய அணிக்கு பெரிய பலமாக இருந்திருக்கும்.

இந்தப் போட்டிக்கான இந்திய அணி குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்
“இந்த அணியைp பார்க்கும் பொழுது பந்து வீச்சு தரமானதாக இருப்பதை நான் பார்க்கிறேன். இந்தியாவின் பிரச்சனை அவர்களின் பேட்டிங்கில் மட்டுமே இருக்கிறது.

- Advertisement -

இந்தியாவின் பந்துவீச்சு இங்கிலாந்து சூழ்நிலையில் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களை கஷ்டப்படுத்தக் கூடிய தாக்குதலாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்திய பேட்டிங் யூனிட்டில் டாப் சிக்ஸ் பேட்ஸ்மேன்களை அவர்களின் தற்போதைய பேட்டிங் ஃபார்மை வைத்து பார்த்தால் புஜாரா மற்றும் ரோகித் சர்மா இருவர் மட்டுமே நம்பிக்கை தருகிறார்கள். மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் அவர்களின் பார்ம் அடிப்படையில் கேள்விக்குறியாக இருக்கிறார்கள்.

இந்தப் போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு மூலம் போட்டிக்குள் மீண்டு வரலாம். ஆனால் ஒரே டெஸ்ட் போட்டி என்பதால் இதற்குள் நேரம் மிகக் குறைவாக இருக்கிறது. எனவே மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் குறைவு.

முதல் இரண்டு நாட்களில் சிறப்பாகச் செயல்பட்டால் பின்பு ஏதாவது சரிவு ஏற்பட்டாலும் அதிலிருந்து மீண்டு வந்து விடலாம். ஆஸ்திரேலியா நல்ல வலுவான பக்கமாகத் தெரிகிறது. ஆனால் இந்திய பந்து வீச்சின் தரத்தில் எனக்கு நம்பிக்கை உள்ளது!” என்று கூறியுள்ளார்!