ஐசிசி ஒன்பதாவது டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியாமல் முதல் சுற்றுடன் வெளியேறியிருக்கிறது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு ரசிகர்களிடையே கடுமையான எதிர்ப்பு உருவாகி இருக்கிறது. உலகக் கோப்பை தொடர் நடந்து கொண்டிருக்கும் பொழுதே ரசிகர் ஒருவர் ஹாரிஸ் ரவுப்பை அத்துமீறி பேசி, அதற்கு அவர் எதிர்வினையாற்றிய சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பி இருக்கிறது. மேலும் அவர் இதற்கு விளக்கமும் கொடுத்து இருக்கிறார்.
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் அமெரிக்க அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது, அந்த அணி முதல் சுற்று உடன் வெளியேறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. இந்த குறிப்பிட்ட போட்டியில் பாகிஸ்தான் அணி எல்லா விதத்திலும் அமெரிக்காவை விட பின்தங்கி இருந்தது.
குறிப்பாக கடைசி ஓவரில் வெல்ல வேண்டிய நிலையில் பாகிஸ்தான் அணி இருந்த பொழுது ஹாரிஸ் ரவுப் அந்த ஓவரை வீசி ரன்கள் விட்டுத் தந்தார். பீல்டிங் செட் அப்புக்கு எதிராக பந்து வீசினார். இதன் காரணமாகவே போட்டி சூப்பர் ஓவருக்கு சென்று அமெரிக்க அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில் அவர் ஹோட்டலில் இருந்து தனது மனைவியுடன் செல்லும் பொழுது, அங்கிருந்த சில பாகிஸ்தான் ரசிகர்களில் ஒருவர் ஹாரிஸ் ரவுப் குடும்பத்தை பற்றி ஏதோ தகாத முறையில் கூற, அதற்கு ஹாரிஸ் ரவுப் ஓடிச் சென்று அந்த ரசிகர் உடன் கைகலப்பில் ஈடுபட முயன்றார். அங்கிருந்த இன்னும் சில ரசிகர்கள் அவரை விலக்கி அனுப்பி வைத்தார்கள்.
இந்த குறிப்பிட்ட சம்பவம் முன்பே நடைபெற்றிருந்தாலும் தற்பொழுதுதான் சமூக வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது. தற்பொழுது இதுகுறித்து விளக்கம் அளித்திருக்கும் ஹாரிஸ் ரவுப் “இந்த விவகாரத்தை நான் சமூக வலைதளத்திற்கு கொண்டு வர வேண்டாம் என்று முடிவு செய்து இருந்தேன். இப்போது வீடியோ வெளியாக இருக்கின்ற காரணத்தினால், நிலைமையை சரி செய்வது அவசியம் என்று உணர்கிறேன். பாகிஸ்தான் அணியின் வீரர்களாக பொதுமக்களிடமிருந்து அனைத்து விதமான கருத்துகளையும் பெற்றுக் கொள்ள தயாராக இருக்கிறோம்.
இதையும் படிங்க : வேற லெவல் டீம செலக்ட் பண்ணி இருக்காங்க.. இந்தியா பைனலில் இருக்கும்.. இதான் காரணம் – ஸ்டீபன் பிளமிங் நம்பிக்கை
எங்களை ஆதரிப்பதற்கும் விமர்சனம் செய்வதற்கும் பொது மக்களுக்கு உரிமை உண்டு. ஆனால் எனது பெற்றோர் மற்றும் குடும்பத்தை விமர்சனத்திற்கு கொண்டு வந்தால் நான் அதற்கு பதில் அளிக்க தயங்கவே மாட்டேன். வீரர்களின் குடும்பத்திற்கு பொதுமக்கள் மரியாதை அளிப்பது மிகவும் முக்கியம்” என்று கூறியிருக்கிறார்.
Fans must behave, players are with families and have a personal life too. Abusing and chanting isn't the way! Disgusting behavior 👎🏼👎🏼👎🏼
— Farid Khan (@_FaridKhan) June 18, 2024
Haris Rauf was furious, this isn't good 👀 #T20WorldCuppic.twitter.com/tc9EhcW3j1