இந்தியாவில் பயப்படுற அளவுக்கு ஒரு பவுலர் கூட இல்ல.. வம்பிழுத்த பாகிஸ்தான் வீரர்

0
1472

பார்ப்பதற்கு விராட் கோலியின் டூப் போலவே இருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் தான் அகமது ஷேசாத். 2015 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடி இருக்கிறார். தற்போது பாகிஸ்தான் அணியில் அகமது சேஷாத் இடம்பெறுவது கிடையாது.

இந்த நிலையில் இந்திய பந்துவீச்சாளர்கள் குறித்து அவர் அளித்துள்ள பேட்டி ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.இதில், ” நான் இந்திய வீரர்களை அவமரியாதையாக சொல்லவில்லை. ஆனால் இந்திய கிரிக்கெட்டில் பேட்ஸ்மேனுக்கு பயத்தை காட்டக்கூடிய எந்த ஒரு பந்துவீச்சாளரும் கிடையாது.

- Advertisement -

இந்த பவுலரை பார்த்தால் எதிரணி பேட்ஸ்மேன்கள் பயப்பட வேண்டும். அப்படி ஒருவர் இந்திய அணியில் கிடையாது. பும்ரா, ஜடேஜா, அஸ்வின் போன்று நல்ல பவுலர்கள் இந்திய கிரிக்கெட்டில் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் அபாயகரமான பவுலர்கள் என்று சொல்ல முடியாது.

அதே சமயம் இந்திய அணியில் பேட்ஸ்மேன்கள். எப்போதுமே அபாயகரமாக தான் இருப்பார்கள். விராட் கோலி மீது நான் நல்ல மதிப்பை வைத்திருக்கிறேன். எனக்கு ஏதாவது சந்தேகம் என்றால் நான் விராட் கோலி இடம் கேட்பேன். அவரும் எனக்கு பதில் அளிப்பார்.

என்னைக் கேட்டால் சோயிப் அக்தருக்கு தவிர எதிரணிக்கு பயத்தை கொடுக்கக் கூடிய வேறு எந்த பந்துவீச்சாளரையும் நான் பார்த்ததில்லை. நான் பாகிஸ்தான் அணிக்கு வந்தபோதே அவர் பெரிய ஜாம்பவானாக தான் இருந்தார். சோயிப் அக்தர் ஓவரில் நான் ஒரு எட்டு பந்துகளை வலை பயிற்சியில் பிடித்திருப்பேன்.

- Advertisement -

அதில் அனைத்துமே ரிவர்ஸ் ஸ்விங் பந்து தான். சோயிப் அக்தரிடம் இரண்டு சிறந்த தகுதிகள் இருக்கின்றன.  ஒன்று அவர் பயிற்சியில் கூட நோபால் வீசமாட்டார். இரண்டாவது பேட்ஸ்மன்களுக்கு வலை பயிற்சி இப்போது அவர் பவுன்சர் வீச மாட்டார்.  ஏனென்றால் பவுன்ஸ்ரால் வீரர்களுக்கு காயம் ஏற்படும் என்று அவருக்கு நன்றாக தெரியும்.

அதே சமயம் நாம் பந்துவீச்சாளர்களை பார்த்து பயப்படக்கூடாது யார் பந்துவீச்சாளர் என்று நாம் பார்ப்பதை விட நம்முடைய முழு கவனமும் பந்தின் மீது தான் இருக்க வேண்டும் என்று அகமது சேஷாத் கூறியுள்ளார். அகமது சேஷாத் 81 ஒருநாள் போட்டியிலும், 13 டெஸ்ட் போட்டிகளும் 59 டி20 கிரிக்கெட் போட்டியிலும் விளையாடியிருக்கிறார்.

மொத்தமாக அவர் சர்வதேச கிரிக்கெட்டில் 10 சதம் அடித்திருக்கிறார். அகமது சேஷாத் கடைசியாக 2009 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக டி20 போட்டியில் விளையாடினார். ஒரு நாள் , டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானுக்காக அவர் விளையாடி ஆறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.