“எங்க ஃபாஸ்ட் பவுலர்ஸ் ரொம்ப மோசமான ஆளுங்க.. கொஞ்சம் ஹெல்ப் இருந்தாலும் முடிஞ்சது!” – கேப்டன் ரோஹித் சர்மா பெருமிதம்!

0
1227
Rohit

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் முதல் அணியாக அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது.

இன்று மும்பை மைதானத்தில் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 357 ரன்கள் குவித்த இந்திய அணி, பந்துவீச்சில் வெறும் 55 ரன்களுக்கு இலங்கை அணியை சுருட்டி, 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் நல்ல ரன் ரேட் உடன் முதல் இடத்திற்கு முன்னேறியதோடு, முதல் அணியாக அரை இறுதி சுற்றுக்கும் இந்திய அணி தகுதி பெற்று அசத்தியிருக்கிறது.

இந்த வெற்றிக்குப் பிறகு பேசி உள்ள இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறும் பொழுது “நாங்கள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளோம் என்பதை கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் இதைத்தான் எங்களுடைய முதல் இலக்காக வைத்திருந்தோம். அதே சமயத்தில் நாங்கள் முதல் ஏழு ஆட்டங்களை விளையாடிய விதம் மிக சரியாக இருந்தது. மேலும் ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு வீரர்கள் வந்து கைகளை உயர்த்தி சிறப்பாக செயல்பட்டார்கள்.

பேட்டிங்கில் நாங்கள் ரன்களை குவித்து செயல்படுவது சவாலாக இருந்தது. நாங்கள் இப்போது எடுத்த ரன்கள்தான் நாங்கள் குவிக்க விரும்பும் டெம்ப்ளேட். இந்த ரன்களை குவித்ததற்கு பேட்ஸ்மேன்களுக்கும் மற்றும் விக்கெட்டுகளை கைப்பற்றிய வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் பெருமை சேரும்.

- Advertisement -

ஸ்ரேயாஸ் மனதளவில் மிகவும் வலிமையான வீரர். அவர் தனது விளையாட்டில் மிகவும் கடினமாக உழைத்து வருகிறார். இன்று நாம் அவர் எப்படிப்பட்டவர் என்று அவருடைய திறமையை பார்த்தோம்.

சிராஜை பொருத்தவரை அவர் மிகவும் தரமான பந்துவீச்சாளர். அவர் தன்னுடைய பார்மில் இருந்தால் அவர் மிகப்பெரிய வித்தியாசத்தை உருவாக்க கூடியவர். கடைசி ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக சூர்யாவும் சிறப்பாக செயல்பட்டு இருந்தார். அணி ஒட்டுமொத்தமாக செயல்பட்ட விதத்தில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

வேகப்பந்துவீச்சாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் திறமையாக செயல்படுவது அவர்களுடைய தரத்தை காட்டுகிறது. மேலும் பந்து வீச்சுக்கு கொஞ்சம் ஏதாவது சாதகமான நிலைமை காணப்பட்டால், இந்த வேகப்பந்து வீச்சு கூட்டணி மிகவும் ஆபத்தானது!” என்று கூறியிருக்கிறார்!