சிஎஸ்கே பவுலர்கள் இங்க எப்படி பர்ஃபார்ம் பண்ணுவாங்கன்னு தெரிஞ்சு, பிளானோட வந்தோம் – கேப்டன் மார்க்ரம் பேட்டி!

0
723

சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே பவுலர்கள் எப்படி செயல்படுவார்கள் என்று தெரிந்துகொண்டு திட்டத்தோடு வந்தோம். ஆனால் எந்தத் திட்டத்தையும் சரியாக செயல்படுத்தவில்லை என்று பேட்டியளித்துள்ளார் எய்டன் மார்க்ரம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ஆறாவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொண்டது. இப்போட்டியில் தோனி டாஸ் வென்று பவுலிங் எடுத்தார்.

- Advertisement -

ஹைதராபாத் அணிக்கு துவக்க வீரர்களாக இம்முறை ஹாரி புரூக் மற்றும் அபிஷேக் ஷர்மா இருவரும் களம் இறங்கினர். நல்ல பார்மில் இருந்த ஹாரி புரூக் 18 ரன்களுக்கு அவுட் ஆனார். அபிஷேக் ஷர்மா 34 ரன்கள் மற்றும் திரிப்பாதி 21 ரன்கள் அடித்து இருவரும் ஜடேஜாவின் பந்தில் ஆட்டம் இழந்தனர்.

மயங்க் அகர்வால், உள்ளே வந்தவுடன் இரண்டு ரன்கள் தோனியிடம் ஸ்டம்பிங் அவுட் ஆனார். கடைசியில் க்ளாசன் மற்றும் மார்கோ யான்சன் இருவரும் தலா 17 ரன்கள் அடித்திருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 134 ரன்கள் எட்டியது ஹைதராபாத் அணி.

இந்த இலக்கை சேஸ் செய்ய களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு ருத்துராஜ் மற்றும் டெவான் கான்வெ இருவரும் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து முதல் விக்கெட்டிற்கு 87 ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்ஸ்மேன்களுக்கு வேலையை எளிதாக்கினார்கள்.

- Advertisement -

ருத்துராஜ் 35 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, மறுபக்கம் கடைசிவரை அவுட் ஆகாமல் இருந்த டெவான் கான்வே 57 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸ் உட்பட 77 ரன்கள் அடித்திருந்தார். சிஎஸ்கே அணி மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 18.4 ஓவர்களில் 138 அடித்தது. 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது.

சிஎஸ்கே அணி இடம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய பிறகு பேட்டி அளித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் பேசுகையில்,

“தோல்வியடைந்த அணியாக இருப்பது வருத்தமளிக்கிறது. இந்த பிட்ச்சில் 130 ரன்கள் அடித்தால் போதாது. 160 ரன்கள் அடித்திருக்க வேண்டும். இந்த இடத்தில் சிஎஸ்கே பவுலர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டார்கள். எனது பாராட்டுக்கள்.

எங்களது பேட்ஸ்மேன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்காதது தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. சிஎஸ்கே பவுலர்கள் இந்த மைதானத்தில் எப்படி செயல்படுவார்கள் என்று நன்றாக உணர்ந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு ஒவ்வொருவரும் திட்டத்தை வகுத்து இங்கு வந்தோம்.

ஆனால் சிஎஸ்கே பவுலர்களுக்கு தாக்கம் கொடுத்து, அவர்களது பவுலிங்கில் ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்து, பாட்னர்ஷிப் அமைக்க தவறிவிட்டோம். எங்களது திட்டத்தை செயல்படுத்த தவறிவிட்டோம். அணியில் சில பேட்ஸ்மேன்கள் பொறுப்பேற்றுக் கொண்டு செயல்பட்டிருக்க வேண்டும். எங்களது பவுலர்கள் செயல்பட்டவிதம் மகிழ்ச்சி அளிக்கிறது. தவறு நேர்ந்தது பேட்டிங்கில் தான்.” என்றார்.