“நான் எதிராக விளையாடிய வீரர்களில் இந்த சிஎஸ்கே வீரர் தான் போராட்ட குணம் மிக்கவர்” – விராட் கோலி!

0
5493

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரியா அணிகளுக்கு இடையேயான அஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது . இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்று இருக்கிறது.

இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அந்த அணி ஒரு கட்டத்தில் 45 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. அப்போது பென் டக்கெட் உடன் ஜோடி சேர்ந்த ஸ்டோக்ஸ் அணியை சரிவிலிருந்து மீட்டார்.

- Advertisement -

இவர்கள் இருவரும் இணைந்து ஐந்தாவது விக்கெட்டுக்கு 132 ரன்கள் சேர்த்தனர் . டக்கெட் மற்றும் பேர்ஸ்டோ அடுத்தடுத்து ஆட்டம் இழந்த பிறகு தனி ஆளாக இங்கிலாந்து அணிக்காக போராடினார் ஸ்டோக்ஸ் . 70 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஸ்டோக்ஸ் ஆட்டம் இழந்தது ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற காரணமாக அமைந்தது. சிறப்பாக ஆடிய அவர் 214 பந்துகளில் ஒன்பது சிக்ஸர்கள் மற்றும் ஒன்பது பவுண்டரிகளுடன் 155 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார் .

2019 ஆம் ஆண்டு ஹெட்டிங்லி நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தனி ஆளாக போராடி இங்கிலாந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார் பென் ஸ்டோக்ஸ் . அதேபோன்று இந்த டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் துரதிஷ்டவசமாக ஆட்டம் இழந்து வெளியேறினார். டெஸ்ட் போட்டிகளில் நான்காவது இன்னிங்ஸில் ஆடிய மிகச் சிறந்த ஆட்டங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது . கிரிக்கெட் வீரர்கள் மற்றும் விமர்சகர்கள் இவரது ஆட்டம் பற்றி தங்களது சமூக வலைதளங்களில் இவரை புகழ்ந்து வருகின்றனர் .

இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பென் ஸ்டோக்சை தனது ட்விட்டர் பக்கத்தில் வெகுவாக பாராட்டி இருக்கிறார். இதுகுறித்து பதிவிட்டு இருக்கும் விராட் கோலி ” நான் எதிராக விளையாடிய வீரர்களின் ஸ்டோக்ஸ் அதிக போராட்ட குணம் உடையவர்” என்று தெரிவித்துள்ளார். ஒரு போட்டியில் கடைசி வரை விட்டுக் கொடுக்காமல் போராடும் திறன் அவருக்கு இருக்கிறது” என்றும் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் டெஸ்ட் போட்டிகளில் இது ஒரு மிகச் சிறப்பான ஆட்டம் என்றும் பாராட்டியுள்ளார். பென்ஸ் போக்ஸ் ஒருநாள் போட்டிகளில் ஓய்வை அறிவித்த போது நான் கிரிக்கெட் விளையாடிய வீரர்களிலேயே பென் ஸ்டோக்ஸ் அதிக போராட்ட குணம் உடையவர் என்று விராட் கோலி பதிவிட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது. தற்போது அதே கருத்தை விராட் கோலி மீண்டும் வலியுறுத்தி இருக்கிறார் .

கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் பென் ஸ்டோக்ஸ். 2019 ஆம் ஆண்டின் அஷஸ் தொடரின் மூன்றாவது போட்டியில் 362 ரன்களை இங்கிலாந்து அணி சேஸ் செய்து வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் 286 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது இறுதி விக்கெட்டை மறுமுனையில் வைத்துக் கொண்டு தனி ஆளாகப் போராடி இங்கிலாந்து அணிக்கு வெற்றியை தேடி தந்தவர் பென் ஸ்டோக்ஸ் அந்தப் போட்டியில் 219 பந்துகளில் 135 ரண்களை எடுத்து ஆட்டம் இழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.