“50 அடிச்ச பேட்ஸ்மேன் இல்ல.. NO.1 பவுலர் இல்ல.. என்னய்யா பண்றிங்க?” – கம்பீர் கடும் கோபம்!

0
527
Gambhir

உள்நாட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4க்கு ஒன்று என சூரியகுமார் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.

இதற்கு அடுத்து தற்பொழுது தென் ஆப்பிரிக்காவில் அந்த அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில், மீண்டும் சூரியகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்கள் கொண்ட அணி விளையாடுகிறது.

- Advertisement -

முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், நேற்று இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியிடம் தோல்வி அடைந்தது.

நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலிய தொடரில் மிகச் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் இடம் பெறவில்லை. மேலும் ஆஸ்திரேலிய தொடரில் அசத்தலான ஆளு கவுண்டராக வந்த அக்சர் படேலை இந்தத் தொடரில் தேர்வு செய்யவே இல்லை.

இதற்கு அடுத்து மேலும் நேற்றைய போட்டியில் கடைசி போட்டியில் அரைசதம் அடித்த ஸ்ரேயாஸ் ஐயர் இல்லை. மிக முக்கியமாக டி20 கிரிக்கெட்டில் தற்போது தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ரவி பிஸ்னாய் இல்லை.

- Advertisement -

இத்தனை இல்லைகளை வைத்துக்கொண்டு, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அந்த நாட்டிலேயே நேற்று இந்திய அணி களம் இறங்கியது எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து காட்டமாகப் பேசி உள்ள கம்பீர் கூறும் பொழுது “ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடாததின் பின்னணியில் உள்ள காரணம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூருவில் கடைசியாக அவர் அரை சதம் அடித்திருந்தார்.

இடது கை வீரர்களை முயற்சி செய்து பார்ப்பதற்காக அவர் சேர்த்தப்படவில்லையா என்று தெரியவில்லை. இந்த விஷயத்தில் குழப்பம் நீடிக்கிறது. இதற்கு அணி நிர்வாகம் மட்டுமே பதில் சொல்ல முடியும்.

அதே சமயத்தில் டி20 கிரிக்கெட்டின் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் பந்துவீச்சாளர் உங்கள் அணியில் இல்லை என்றால் எப்படி? மறந்துவிடாதீர்கள் இது உங்களுடைய முக்கிய அணி. நீங்கள் சில இளைஞர்களுக்கு வாய்ப்பு தருகிறீர்கள். ஆனால் இது குறித்து சூரியகுமார் மற்றும் அணி நிர்வாகம்தான் பதில் சொல்ல வேண்டும்!” என்று கூறியிருக்கிறார்!