ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருது வென்ற நிதீஷ் குமார் ரெட்டி தனது காயம், பவுலிங் பேஸ் மற்றும் கம்பேக் குறித்து பேசியுள்ளார்.
இந்தப் போட்டியில் இந்திய அணி 159 ரன்கள் இலக்கை சேஸ் செய்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது.
சிஓஇ மையத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு பயிற்சிகள் மூலம் தனது ஃபிட்னஸ் மற்றும் எக்ஸ்ட்ரா பேஸ் பவுலிங் திறன் உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து நிதீஷ் குமார் ரெட்டி பேசும்போது “இன்ஜுரிக்கு பிறகு பாடி இப்போது கிரேட்டாக இருக்கிறது சிஓஇ-யில் நல்ல வொர்க் செய்ததால் பாடி நன்றாக ரெக்கவரி ஆகிவிட்டது சிறந்த ஆல்ரவுண்டர் ஆக வேண்டும் என்பதற்காக எக்ஸ்ட்ரா பேஸ் பெற விரும்பினேன் அது இப்போது கிடைக்கிறது” என்று கூறியிருக்கிறார்.
தொடர்ந்து கம்பேக் குறித்து பேசிய அவர் “நம் எபிலிட்டி மீது நம்பிக்கை வைத்து கம்பேக் கொடுப்பதே முக்கியம் கிரிக்கெட் ஒரு ஃபன்னி கேம் எந்த மொமெண்ட்டிலும் எதுவும் மாறலாம்” என்று கூறியிருக்கிறார்.