ஐபிஎல் 2025 கிரிக்கெட்டி லீக் தொடர் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான வீரர்களின் தக்க வைப்பு விபரங்கள் நேற்று நடைபெற்ற பொது குழுவில் வெளியிடப்பட்டது.
இதில் ஆர்டிஎம் கார்டு விதியை பயன்படுத்த ஐபிஎல் நிர்வாகம் ஒரு புதிய விதிமுறையை வெளியிட்டு இருக்கிறது. ஆர்டிஎம் கார்டு முன்னரே அறிமுகப்படுத்தப்பட்டாலும் அந்த விதியை தற்போது மாற்றியமைத்து புதிய முறையில் வெளியிட்டிருக்கிறது.
ஐபிஎல் குழு அடுத்த வருடம் நடைபெற உள்ள கிரிக்கெட்டு தொடருக்கு முன்பாக ஒரு அணி ஆறு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அது தக்க வைப்பு மூலமாகவோ அல்லது ஆர்டிஎம்கார்டு என்னும் விதிமுறை மூலமாகவோ வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம். இதில் 5 வெளிநாட்டு அல்லது இந்திய வீரர்கள் தக்க வைக்கப்பட வேண்டும் மேலும் அதில் ஒரு வீரர் நிச்சயமாக அன் கேப்டு பிளேயராக இருக்க வேண்டும்.
இந்த நிபந்தனையை வித்த ஐபிஎல் குழு ஆர்டிஎம் கார்டு விதிமுறைக்கு ஒரு புதிய நிபந்தனையை வெளியிட்டுள்ளது. அதாவது ஒரு அணி தனது வீரரை தக்கவைக்காமல் ஏலத்தில் வெளியிடும்போது மற்ற அணி அவரை குறிப்பிட்ட தொகைக்கு வாங்கும். இந்த சூழ்நிலையில் வீரரை வெளியிட்ட அந்த அணி அடுத்த அணி வாங்கிய அதே தொகைக்கு ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தி திரும்பவும் தனது அணிக்கே வாங்கிக் கொள்ளும் முறைதான் முன்னர் இருந்தது.
ஆனால் தற்போது அதில் சிறிய ஒரு மாற்றம் செய்துள்ளது. உதாரணமாக டிஎம் ஏ ஒரு வீரரை வெளியிடும்போது, டீம் பி யானது ஒரு குறிப்பிட்ட தொகைக்கு அந்த வீரரை வாங்க முயற்சிக்கும். இதில் டீம் ஏ அதே தொகைக்கு அந்த வீரரை வாங்க விரும்பும் போது டீம் பி க்கு அந்த ஏலத் தொகையை உயர்த்த மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும். அப்படி ஏலத் தொகையை உயர்த்தினால் டீம் ஏ ஆனது டீம் பி உயர்த்திய ஏலத் தொகைக்கு வாங்க வேண்டும்.
ஒருவேளை டீம் ஏ ஆர்டிஎம் கார்டு விதிமுறையை பயன்படுத்த விரும்பவில்லை என்றால் தான் உயர்த்திய ஏலத் தொகைக்கு டீம் பி அந்த வீரரை வாங்கிக் கொள்ளும். இதுவே தற்போது ஐபிஎல்லில் கொண்டுவரப்பட்டுள்ள நிபந்தனையாகும். இது ஒரு வீரரை ஏலத்தில் வாங்க முயற்சிக்கும் ஒரு அணி ஏமாற்றம் அடையக் கூடாது என்பதற்காக இந்த விதிமுறையை பிசிசிஐ கொண்டு வந்துள்ளது.
இதையும் படிங்க : இலங்கை கூட தோத்துட்டோம்.. ஆனா இந்திய அணிக்கு எதிரா இந்த திட்டத்தோடதான் வருவோம் – டிம் சவுதி பேட்டி
எனவே இந்த வருட இறுதிக்குள் ஒவ்வொரு ஐபிஎல் அணியும் தான் தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்களின் விபரங்களை வெளியிட வேண்டும். மேலும் ஏலத்தின் போது இந்த நிபந்தனைக்கு உட்பட்டு தான் வாங்க விரும்பிய வீரர்களை ஆர்டிஎம் கார்டு மூலமாக ஐபிஎல் அணிகள் பயன்படுத்தி வாங்கிக்கொள்ளலாம்.