இலங்கை அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை தோற்ற நியூசிலாந்து அணி புதிய திட்டங்களுடன் இந்தியாவுக்கு வரும் என அந்த அணியின் கேப்டன் டிம் சவுதி கூறியிருக்கிறார்.
அடுத்த மாதம் அக்டோபர் மத்தியில் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் வரும் நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்திய அணிக்கு உள்நாட்டில் விளையாடும் ஒவ்வொரு டெஸ்ட் போட்டியும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்வதற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இலங்கை அணிக்கு எதிரான சோகம்
இலங்கை அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்பாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் நியூசிலாந்து அணி மூன்றாவது இடத்தில் இருந்தது. மேலும் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளில் இந்திய அணிக்கு எதிராக மூன்று போட்டிகளில் நியூசிலாந்தின் விளையாடவும் இருந்தது.
இதன் காரணமாக இலங்கையனுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றால் இந்திய அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பு பெரிய நெருக்கடியை நியூசிலாந்து உண்டாக்கி முன்னேறவும் சாதகங்கள் இருந்தன. இப்படியான நிலையில் இலங்கைக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் தோற்று, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திலிருந்து ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது.
இந்திய அணிக்கு எதிராக புதிய திட்டம்
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி மோசமான முறையில் தோல்வி அடைந்து இருக்கின்ற காரணத்தினால் ஆசிய கண்டத்தில் அந்த அணி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு கொண்டு வந்த மூலோபாய அடிப்படைத் திட்டத்தையே மாற்றி அமைக்க வேண்டிய தேவை இருப்பதாக நியூசிலாந்து கேப்டன் டிம் சவுதி கூறியிருக்கிறார்.
இதுகுறித்து டிம் சவுதி கூறும் பொழுது “வந்து விளையாடுவதற்கு மிகவும் கடினமான இடம். இந்த போட்டியில் எல்லா விஷயங்களுமே கடினமாக இருந்தது. எங்களுக்கு முதல் போட்டியில் சில நல்ல சூழ்நிலைகள் அமைந்தன. சமீபமாக இலங்கை சில நல்ல கிரிக்கெட் விளையாடி வருகிறது”
இதையும் படிங்க :
“நாங்கள் எங்களுடைய நாட்டிற்கு திரும்பி சென்று மீண்டும் ஒரு அணியாக சேர்ந்து, அதன் பிறகு டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இந்தியாவுக்கு செல்கின்றோம். இலங்கை போலவே இந்தியாவிலும் அதே சவால்கள் இருக்கும். எனவே நாங்கள் அடிப்படைத் திட்டங்களில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். எங்களுடைய பந்துவீச்சாளர்கள் பவுலர்கள் மேல் அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.