“கடைசி ஓவர் ஸ்பின்னருக்கு கொடுத்தது, எனக்கு நானே வச்சிக்கிட்ட ஆப்பு” – ஷிகர் தவான் பேட்டி!

0
474

கடைசி ஓவர் ஸ்பின்னருக்கு கொடுத்தது எங்களுக்கு தவறாக முடிந்து விட்டது என்று பேசியுள்ளார் ஷிகர் தவான்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய மிக முக்கியமான போட்டியில் ஏற்கனவே பிளே-ஆப் வாய்ப்பை இழந்த டெல்லி கேப்பிட்டஸ் அணியிடம் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய போட்டியில் பஞ்சாப் அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது.

- Advertisement -

பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீசுகையில் 20ஆவது ஓவரை சுழற்பந்து வீச்சாளருக்கு கொடுத்தார் கேப்டன் ஷிகர் தவான். இந்த முடிவு அவர்களுக்கு சரியாக அமையவில்லை. அந்த ஓவரில் சுழல் பந்துவீச்சாளர் ஹர்ப்ரீத் பிரார் இரண்டு சிக்ஸர்கள் இரண்டு பவுண்டரிகள் உட்பட 23 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.

இந்த இடத்தில் தான் தவறு நடந்தது. டெல்லிக்கு திருப்புமுனையாக மாறியது என்று குறிப்பிட்டு போட்டி முடிந்த பிறகு அளித்த பேட்டியில் பேசியுள்ளார் ஷிகர் தவான். அவர் பேசியதாவது:

“இன்றைய போட்டி முடிவு விரக்தியை கொடுக்கிறது. நாங்கள் பந்துவீசுகளில் பவர் பிளே ஓவர்களில் சரியாக பந்து வீசவில்லை. பந்து நன்றாக ஸ்விங் ஆனதால், பவர்-பிளேவில் சில விக்கெட் எடுத்திருக்க வேண்டும். போட்டி மிக நெருக்கமாக சென்றது. ஆனால் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை.

- Advertisement -

கடைசி ஓவரில் அந்த நோ-பால் வீசிய பிறகு எங்களுக்கு சிறிய நம்பிக்கை பிறந்தது. ஆனால் வெற்றி பெற்ற அணியாக இல்லாதது வருத்தமளிக்கிறது. லிவிங்ஸ்டன் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தார். போராடினார்.

நாங்கள் பந்துவீசுகையில் கடைசி ஓவரை சுழற்பந்து வீச்சாளருக்கு கொடுத்த முடிவு எங்களுக்கே தவறாக முடிந்துவிட்டது. அதற்கு முந்தைய ஓவர்கள் எங்களுடைய வேகப்பந்துவீச்சாளர்கள் ஓவருக்கு 18 முதல் 20 ரன்கள் வரை விட்டுக்கொடுத்து வந்தனர். ஆகையால் தான் சுழல் பந்துவீச்சாளருக்கு சென்றேன். கடைசி இரண்டு ஓவர்கள் எங்களுக்கு ஆட்டத்தையே இழக்க வேண்டிய நிலைக்கு தள்ளிவிட்டது.

பவர் பிளே ஓவர்களில் சரியான லைன் மற்றும் லென்த்தில் எங்களுடைய பவுலர்கள் பந்துவீசவில்லை. ஆகையால் திட்டமிட்டபடி செயல்படவும் முடியவில்லை. இந்த பிட்ச்சில் துவக்கத்தில் சில விக்கெட்டுகளை எடுத்தால் மட்டுமே ஆட்டத்திற்குள் வர முடியும். அதை செய்ய தவறிவிட்டோம்.

இந்த தொடர் முழுவதும் பவர் பிளே ஓவர்களில் பந்துவீச்சாளர் சரியான லைன் மற்றும் லென்த்தில் வீசவில்லை. அதுதான் எங்களுக்கு பின்னடைவையையும் தந்திருக்கிறது. ஒவ்வொரு போட்டியிலும் பவர்-பிளே ஓவர்களில் 50 முதல் 60 ரன்கள் விட்டுக்கொடுத்து விடுகிறோம். மற்ற பிட்ச்சுகளை விட இந்த பிட்ச்சில் முதல் சில ஓவர்கள் நன்றாக ஸ்விங் ஆனது. அதில் விக்கெட்டுகளை எடுத்திருக்க வேண்டும்.

நாங்கள் பேட்டிங் செய்கையில் முதல் ஓவர் மேய்டன் ஆனது. இரண்டாவது ஓவரின் முதல் பந்திலேயே நான் ஆட்டம் இழந்து விட்டேன். அந்த முதல் ஆறு பந்துகளில் ரன்கள் அடிக்காதது பின்னடைவை கொடுத்திருக்கிறது.” என்றார்.