கேப்டன் பதவிக்கு ஆசை.. சிக்கலில் மாட்டிய ஜெய்ஸ்வால்.. அவங்க மனசு வச்சாதான் கிரிக்கெட்டே ஆட முடியும் – எம்சிஏ செயலாளர்

0
179

இந்திய அணியின் நட்சத்திர இளம் துவக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது மும்பை அணியை விட்டு போவா அணிக்கு விளையாட விரும்பியதாகவும் ஆனால் சில குடும்ப சிக்கல்களின் காரணமாக அவர் மீண்டும் மும்பை அணிக்கு விளையாட விருப்பம் தெரிவித்திருந்தார்.

இந்த சூழ்நிலையில் அவர் மும்பை அணிக்கு விளையாடப் போவதிலும் சில சிக்கல்கள் இருப்பதாக மும்பை மாநில கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் அபய் ஹடப் கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஜெய்ஸ்வால் எடுத்த முடிவு

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் தற்போது மும்பை மாநில அணிக்காகவும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மும்பை அணியின் கேப்டன் ரகானேவுடன் இவருக்கு சில கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும் மேலும் தான் கேப்டன் பதவியை விரும்புவதால் கோவா அணிக்கு செல்ல விரும்புவதாகவும் ஏற்கனவே கூறி இருந்தார்.

இந்த சூழ்நிலையில் தனது குடும்பத்தை கோவாவிற்கு மாற்ற சில சிக்கல்கள் இருப்பதால் அந்த முடிவை கைவிட்டு விட்டு தற்போது மும்பை அணிக்கே மீண்டும் விளையாட விருப்பம் தெரிவித்திருந்தார். இந்த சூழ்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்திருந்த மும்பை மாநில கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் அபய் ஹடப் அதில் சில சிக்கல்கள் இருப்பதாகவும் இரண்டு பேரின் ஒப்பீடு இருந்தால் மட்டுமே அவர் விளையாட முடியும் என்று சில கருத்துக்கள் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இரண்டு பேர் மனது வைக்கணும்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “வியாழக்கிழமை மாலை ஜெய்ஸ்வால் எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார். அதில் அவர் தனது குடும்பத்தை கோவாவில் மாற்றுவதற்கு சில சிக்கல்கள் இருப்பதாகவும் அதனால் தனது திட்டத்தை கைவிட்டு தற்போது மும்பை அணிக்கு மீண்டும் விளையாடு விரும்புகிறேன் எனவும் கூறியிருந்தார். மேலும் எம்சிஏ வழங்கிய என்ஓசியை கோவா கிரிக்கெட் சங்கம் மற்றும் பிசிசிஐ இடம் ஒப்படைக்கவில்லை எனவும் கூறி இருந்தார்.

இதையும் படிங்க:ஒரு அணியில் 10 வீராங்கனைகளும் ரிட்டையர்டு அவுட் ஆன அதிசயம்.. தானாக வெளியேறியது ஏன்?.. முழு தகவல்கள்

மேலும் அவர் மும்பை அணிக்காக வேண்டும் விளையாட விரும்பினால் அவரது எதிர்காலம் குறித்து மும்பை தேர்வு குழு மற்றும் கிரிக்கெட் மேம்பாட்டு குழு கைகளில் மட்டுமே இருக்கிறது. அவர்கள் பரிசீலித்தால் மட்டுமே ஜெய்ஸ்வால் விளையாட முடியும்” என்று கூறுகிறார். இது குறித்து கோவா கிரிக்கெட் சங்க செயலாளர் சம்பா நாயக் கூறும்போது அவரின் அட்டவணையின் படி அவர் கோவா அணிக்காக விளையாட முடியாது என்பதை நாங்கள் கருத்தில் கொள்கிறோம். இருப்பினும் எங்கள் இருவருக்கும் இடையே ஒரு பரஸ்பர புரிதல் இருக்கிறது. அவர் முடிவை மதிக்கிறோம் என பேசி இருக்கிறார்.

- Advertisement -