அடுத்த வருடம் ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா கேப்டன் ஆக மட்டுமே விளையாட வேண்டும் எனவும், குறிப்பிட்ட ஒரு அணி அவரிடம் பேசி அவரை கேப்டனாக மாற்ற வேண்டும் எனவும் முகமது கைப் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியாவை கொண்டு வந்து கேப்டன் ஆக்கியது. ஐந்து முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கோப்பையை வென்ற கேப்டன் ரோஹித் சர்மாவை நீக்கியது.இதனால் பல குழப்பங்கள் அணியில் ஏற்பட மும்பை இந்தியன்ஸ் அணி படுதோல்வி அடைந்தது.
ஆர்சிபி இந்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும்
இது குறித்து பேசி இருக்கும் முகமது கைஃப் கூறும் பொழுது “ஆர்சிபி அணி எப்படியாவது இந்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும். ரோஹித்திடம் பேசி அவரை கேப்டனாக கொண்டு வர வேண்டும். அவர் ஒரு பேட்டராக பெரிய ஸ்கோர் செய்யாமல் இருக்கலாம், ஆனால் 40 ரன்கள் அரை சதங்கள் ஆகியவற்றை அடித்தார். ஆனால் அவருக்கு ஒரு சிறந்த பிளேயிங் லெவனை உருவாக்குவது எப்படி? என நன்றாக தெரியும்.
“ஆர்சிபிக்கு இதனால் நல்ல ஆதாயம் கிடைக்கும். அவர்களுக்கு ஐபிஎல் கோப்பை வறட்சியும் நீங்கும். ரோஹித் சர்மாவுக்கு வீரர்களின் தோள்மேல் எப்படி கை போட்டு வேலை வாங்குவது? என்று தெரியும். அவர் சரியான பிளேயிங் லெவனை உருவாக்குவார். வாய்ப்பு கிடைத்தால் ஆர்சிபி இதை விட்டு விடக்கூடாது”
ரோஹித் சர்மா கேப்டன் ஆக மட்டுமே விளையாட வேண்டும்
“ரோஹித் சர்மா என்னை பொறுத்தவரையில் கேப்டனாக மட்டுமே விளையாட வேண்டும். ஏனென்றால் அவர் சிறந்த கேப்டனாக இருக்கிறார் டி20 உலகக்கோப்பையை வென்று வந்திருக்கிறார். மக்கள் அவரை கேப்டனாக விளையாடுவதை விரும்புகிறார்கள். எந்த அணி நிர்வாகம் அவருக்கு கேப்டன் பொறுப்பை கொடுக்கிறது அந்த அணியில் மட்டுமே அவர் விளையாட வேண்டும்”
“குஜராத்தில் இருந்து ஹர்திக் பாண்டியா வந்தது போல ரோஹித் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். அவருக்கு மீதம் இருக்கும் இரண்டு மூன்று ஆண்டுகளில் அவர் கேப்டன் ஆக மட்டுமே விளையாட வேண்டும். கேப்டனாக ஐபிஎல் தொடரில் பலருக்கு இல்லாத தரம் அவரிடம் இருக்கிறது. அவர் ஐந்து ஐபிஎல் கோப்பைகளை வென்ற கேப்டனாக இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.