இது கொஞ்சம் ஓவரா தெரியல..? தோனியுடன் ஸ்ரேயாஸ் ஐயரை ஒப்பிட்ட முன்னாள் வீரர் !

0
125

2022 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் ஐயர் பெற்றுள்ளார். திறமையான வீரராக அறியப்பட்டாலும் இன்னும் கிரிக்கெட்டில் அவர் பெரிய தாக்கத்தை ஏதும் ஏற்படுத்தவில்லை. இந்த நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் தோனியுடன் ஸ்ரேயாஸ் ஐயரை  ஒப்பிட்டு முன்னாள் வீரர் முகமது கைஃப் பேசி இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முகம்மது கைஃப், தோனி விளையாடும் போது அவர் களத்தில் சிரமப்படுவது போல் உங்களுக்கு தெரியும். ஆனால்  அணிக்காக அதிக ரன்களை அடித்து வெற்றி பெற வைப்பார்.ஸ்ரேயாஸ்  ஐயரும் தற்போது அதே போல் தான் இருக்கிறார். அவர் களத்தில் நிற்கும் போது தடுமாறுவது போல் தெரிகிறது. ஆனால் அவர் முக்கிய கட்டத்தில் ரன்களை அடித்து இந்திய அணியை கரை சேர்க்கிறார்.

எனினும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு புல் ஷாட் ஆடுவது அவுட் ஆகி விடுகிறார். அது ஒரு குறையாக தான் இருக்கிறது. அதை தவிர 2022 ஆம் ஆண்டில் அவர் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். ஸ்ரேயாஸ் அனைத்துப் போட்டிகளிலும் ரன்களை அடித்து இந்தியாவின் வெற்றிக்காக பாடுபடுகிறார். வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் கூட அவர் 86 ரன்கள் அடித்ததன் காரணமாகவே இந்திய அணி முதல் இன்னிங்ஸ் பெரிய முன்னிலையில் பெற முடிந்தது.

- Advertisement -

அந்த இன்னிங்ஸில் ஸ்ரேயாஸ்  கவர் ட்ரைவ், புட் ஒர்க் அனைத்தும் பிரமாதமாக இருந்தது. ஸ்ரேயாஸ் சாட் பால் விளையாடுவதில் குறை இருக்கிறது. ஆனால் இது போன்ற குறை , எல்லாம் பேட்ஸ்மேன்களுக்குமே இருக்கும். அந்த சிக்கல் அவர்கள் வாழ்க்கை முழுவதுமே தொடரும்.


ஆனால் அதில் அவர் எப்படி சமாளிக்கிறார்கள் என்பது பொருத்தே அவர்களுடைய வெற்றி இருக்கும்.என்னை பொருத்தவரை ஸ்ரேயாஸ் தன்னுடைய குறையை பிரமாதமாக எதிர்கொள்கிறார் என்று முகமது கைஃப் பாராட்டியுள்ளார். எனினும் தோனியை ஸ்ரேயாசுடன் அவர் ஒப்பிட்டு பேசியது ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை. பலரும் தோனி மீது அப்படி உங்களுக்கு என்ன கோபம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.