பாகிஸ்தான அணி சமீப காலத்தில் சில ஆண்டுகளாக தொடர்ந்து உள்நாட்டில் விளையாடிக் கொண்டு வந்தது. அந்த நேரத்தில் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் தங்கள் வாழ்நாளில் சிறந்த பேட்டிங் பார்மில் இருந்தார்கள். இந்த இரண்டு காரணங்களாலும் பாகிஸ்தான் அணி மிகச் சிறந்த அணியாக வெளியில் தெரிந்தது. தற்பொழுது இது குறித்து மைக்கேல் வாகன் பேசியிருக்கிறார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் வெளியில் வந்து விளையாட அந்த அணியின் பலவீனங்கள் பட்டவர்த்தனமாக தெரிய ஆரம்பித்து இருக்கிறது. கடந்த ஆண்டு இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரிலிருந்து, பாகிஸ்தான் அணியில் இருக்கும் பிரச்சனைகள் வெளியில் தெரிந்தது.
இதற்கு அடுத்து அவர்கள் பல நாடுகள் விளையாடும் மிக முக்கியமான ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் வந்து இந்தியாவில் விளையாடிய போது, அவர்களுடைய வீரர்களில் பெரும்பாலானவர்கள் சர்வதேச தரத்தில் இல்லை என்பது தெரியவந்தது. அந்த உலகக் கோப்பையில் ஏற்பட்ட தோல்வி பாகிஸ்தான் கிரிக்கெட்டில் நிறைய மாற்றங்களையும் கொண்டு வந்தது.
இந்த நிலையில் தற்பொழுது மீண்டும் பாபர் அசாம் கேப்டன் ஆகவும், புதிய பயிற்சியாளராக கேரி கிரிஸ்டன் இருவரையும் வைத்து பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பையைவிளையாடியது. நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரிலும் முதல் சுற்றிலேயே வெளியேறியும் இருக்கிறது.
தற்பொழுது இது குறித்து மைக்கேல் வாகன் கூறும் பொழுது “கேரி கிரிஸ்டன் ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்குவதற்காக பாகிஸ்தான் அணியில் சில இளம் வீரர்களை கொண்டு வருவார் என்று நான் நினைக்கிறேன். அவர் பாகிஸ்தான் அணியை பார்த்து பெரிய வலிமையும் ஆழமும் இருக்கிறதா? என்று நினைப்பார். ஆனால்நான் அப்படி இருப்பதாக எதுவும் நினைக்கவில்லை. பலவீரர்கள் அணியில் இல்லை. பாகிஸ்தான் அணியில் இருக்கவே அழச் செய்கிறார்கள்.
இதையும் படிங்க : ரோகித் இப்படி பண்ணுவார்னு எதிர்பார்க்கல.. ஆனா விமர்சிக்க முடியல.. சாம்சனைதான் எல்லோரும் நினைச்சோம் – ஹர்பஜன் சிங் பேட்டி
நான் பாகிஸ்தான அணியை அவமரியாதை செய்யவில்லை, ஆனால் அந்த அணி நல்ல அணியாக இல்லை. பாகிஸ்தான் டி20 கிரிக்கெட் விளையாடும் விதத்தில் அவர்களுக்கு போதுமான சக்தி இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவர்களிடம் சில நல்ல வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களிடம் உலகத்தரமான ஸ்பின்னர்கள் கிடையாது. மிகக்குறிப்பாக அவர்களுடைய பேட்டிங் வரிசையில் அடித்து நொறுக்க கூடிய பேட்ஸ்மேன்களே கிடையாது. பகார் ஜமான் மட்டுமே டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேனாக பாகிஸ்தான் அணியில் இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.