என்ன பாஸ் சொல்றிங்க? 2024 டி20 உலக கோப்பை குறித்து ரோகித் சர்மா கருத்து.. குழப்பத்தில் ரசிகர்கள்!

0
1164
Rohitsharma

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இருக்கிறது. இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை முடித்துக் கொண்டு நட்சத்திர வீரர் விராட் கோலி தனி விமானத்தில் நாடு திரும்பிவிட்டார்.

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தீவுக் கூட்டத்திற்கு மிக அருகில் இருக்கும் அமெரிக்காவிற்கு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சென்றுள்ளார். காரணம் கலிபோர்னியா மாகாணத்தில் தன்னுடைய “கிரிக் கிங்டம்” எனும் கிரிக்கெட் அகாடமியை தொடங்கி வைக்க சென்று இருக்கிறார். அங்கு அவருக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

- Advertisement -

மேலும் அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா இரு நாடுகளிலும் சேர்த்து டி20 தொடர் நடத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் இதை முன்னிட்டு இந்த ஆண்டு கிரிக்கெட்டை தீவிரப்படுத்தும் விதமாக மேஜர் லீக் கிரிக்கெட் என்ற பெயரில் டி20 தொடர் மிக வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

ரோகித் சர்மா தற்போது அமெரிக்காவில் கிரிக்கெட்டுக்கான தேவைகள் மிக அதிக அளவில் அதிகரித்துள்ள காரணத்தால் தனது கிரிக்கெட் அகாடமியை அங்கும் திறக்க முடிவு செய்து இன்று திறந்திருக்கிறார். இதில் பங்கேற்ற அவரிடம் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டதற்கு அவர் மிக வெளிப்படையான பதில்களை கூறி இருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ரோஹித் சர்மா கூறும் பொழுது “கிரிக்கெட்டை அமெரிக்காவில் வளர்க்க வேண்டும் ; கிரிக்கெட் அடிப்படைகளை இளைஞர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய நோக்கம். அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க இருக்கும் டி20 தொடரில் இந்திய அணிக்காக விளையாட நான் நிச்சயம் அமெரிக்காவுக்கு வருவேன்.

- Advertisement -

என்னுடைய முன்மாதிரி சச்சின்தான். நான் ஒரு கிரிக்கெட் வீரராகவும் ஒரு மனிதராகவும் அவரை மிகவும் நேசிக்கிறேன். மேலும் பின் தொடர்கிறேன். அவர் தன்னுடைய அறிமுகத் தொடரில் 16 வயதில் வக்கார் யூனுஸ் மற்றும் வாசிம் அக்ரம் போன்ற மிகப்பெரிய பந்துவீச்சாளர்களை எதிர்கொண்ட விதம் அபாரமானது. எனக்கு அது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவருடைய ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பை சிறுவயதில் இருந்து நான் பார்க்கிறேன் அவரை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்!” என்று கூறியிருக்கிறார்!

தற்பொழுது இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் ஹர்திக் பாண்டியா தலைமையில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை வெளியில் வைத்து மிகவும் இளமையான ஒரு டி20 இந்திய அணியை உருவாக்கி வருகிறது. இந்த நிலையில் ரோகித் சர்மா தான் நிச்சயம் அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் டி20 உலக கோப்பையில் விளையாட அமெரிக்கா வருவேன் என்று கூறியிருப்பது இந்திய ரசிகர்களிடையே மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமைந்திருக்கிறது.

தற்போது ஹர்திக் பாண்டியா கேப்டனாக இருப்பது ஒரு தற்காலிகமான ஏற்பாடு என்பதாகத்தான் ரோகித் சர்மாவின் பேச்சிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை முடித்துக் கொண்டு மீண்டும் இந்திய டி20 அணியின் கேப்டனாக தான் வருவேன் என்று ரோகித் சர்மா மறைமுகமாக குறிப்பிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பேசி வருகிறார்கள்!